பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல் பெற்ற பழங்களுள் ஒருபழம் மாம்பழம். அவளது கன்னமோ மாம்பழம். பச்சைக் கிளிக்குப் பயன்படும் ஒருபழம் கோவை. அவளிதழ் கோவைப் பழங்கள். அவளது குதிகால் அத்திப் பழங்கள். - வேலை நிறுத்தம் செய்யாத வெண்ணிலா மாலைப் பொழுது மறைந்தபின் வந்தது. தோழியும் அவளும் சோலைக்குச் சென்றனர். தோழிதான் முதலில் பேசத் தொடங்கினாள். அதற்குப் பின்னர் அவளும் பேசினாள். வேனிலும் வந்தது, வேம்பும் மலர்ந்தது, தேனினும் இனியவர் சென்றநாள் முதலாய் ஊணு மில்லை உறக்கமு மில்லை ! அவர் வர வில்லை ஆதலின், வேம்பின் தொகைமலர் பறித்துச் சூடா திருக்கிறேன். இவ்வூர் மக்களோ என்னைப் பற்றி அலர்தூற்று கின்றனர். அதுகேட் டென்னுளம் ஒரத்திப் பழத்தை ஒரேழு நண்டுகள் அழுத்தி மிதித்தால் அப்பழம் எப்படிக் குழையுமோ அப்படி குழைந்துபோய் விட்டதே என்செய்வேன் தோழி-என்கிறாள் தலைவி.