பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலன் என்பவன் காவற் கைதி. கணவன் என்பவன் ஆயுட் கைதி. கவிஞன் என்பவன் கற்பனைக் கைதி. புலவன் என்பவன் புத்தகக் கைதி.

கல்வியிற் சிறந்த கம்பனும், கம்பனை ஓயா தெதிர்த்த ஒட்டக் கூத்தனும், புகழேந்திப் புலவரும் புத்தகக் கைதிகள்.

சேனா வரையரும் சேக்கி ழாரும், அந்த வரிசையில் அமிர்தகவி ராயரும், மறைமலை அடிகளும் பண்டித மணியும், சவரி ராயரும் சாமிநா தையரும், இலக்குவ னாரும், இளங்கோவன் அவர்களும், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரும் அரசியல் மேதையாம் அண்ணா அவர்களும், பாடை ஏறும் வரையிலே, பயன்தரும் ஏடும் கையுமாய் இருந்தோ ராவர்.