பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பருவம் என்பது காலத்தின் பக்குவம்.

பெண்ணுக் கமைந்திடும் பேதைப் பருவமோ,
நிமிர்ந்து வளரும் நெற்பயிர் போன்றது.

மணமாலைக் குரிய மங்கைப் பருவமோ,
நிதானமாய்க் குனியும் நெற்கதிர் போன்றது.

மாதர்க் கெல்லாம் மங்கைப் பருவமே,
எச்சில் முத்தத்திற் கேற்ற பருவம்!
அந்த பருவம் வந்த உடனே
நங்கையர்க் கெல்லாம் நாண மேற்படும்.

நாணமே பெண்மைக்கு நல்ல மதிப்புரை.
திருமண வாழ்க்கையே சிறந்த பதிப்புரை.