பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைக்கப்படுகின்ற தமிழ்ச்சொல் பொலிக என்பதுடன் இவ்வாராய்வுரை நிறைவு செய்யப்படுகின்றது. l இப்பணியை யான் தொடங்கியது முதல் எனக்கு உதவியும் யா, சொல்வதை ஏற்றும் செயற்படுத்தியும் வரும் நண்பர் திரு அ. பஞ்சநாதன் அவர்கட்கு என்றும் நன்றியுடையேன். அச்சுப் பணியைச் செய்த அச்சகத்தார்க்கும் இப்பணி தொடங்க மனம் பற்றிய இன்றைய இயக்குநருக்கும் என் நன்றி உரியதாகுக. - நூல் விரிவுரையுடன் பதிப்பாகிக் கொண்டிருக்கும்பொழுதே இவ் வாராய்வுரையைத் தட்டச்சு செய்யத் தொடங்கினேன். தட்டச்சு செய்ய இயலாமை நேர்ந்தபோது கையால் எழுதினேன். அதனையும் தொடர முடியாது கண் பார்வை குறைந்தது. தொடர்ந்து இவ்வாராய்வுரையை முடிப்பதற்கு சொல்லி எழுதச்செய்யவேண்டி நேர்ந்தது. என் நண்பர் திரு. மாரிமுத்து என்பார் புலவர் கோ. நாகேந்திரன் அவர்களை அறிமுகம் செய்து அனுப்பினார். புலவர் அவர்கள் என் கையாகவும் என்கண்ணாகவும் அமைந்து இவ்வாராய்வுரை நிறைவேற பேருதவி புரிந்தார். என் நூல்களில் இறுதி நூலாகிய இப்பதிப்பு யான் நினைத்தபடி நிறைவேறுகிறது என்றால் அதற்குப் புலவர் கோ. நாகேந்திரன் அவர்களே கரணியம் ஆவர். கைம்மாறு கருதா அவர்தம் பெருந்தகவை எண்ணி உள்ளம் உவந்து அவர் வாழ்க! அவர் இல்லம் பொழிக! வாழ்வில் வளமும் நலமும் ஓங்குக என்று வாழ்த்துவதோடு நெஞ்சத்தின் அடித்தளத்திலிருந்து வரும் நன்றியையும் படைக்கின்றேன். கலைக்குடில், அன்பன், 58, எழில்நகர், தஞ்சை கோவை. இளஞ்சேரன். ~ఈశ్రీ<s -