பக்கம்:சூரப்புலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 குகைக்குள்ளிருப்பவர்கள் உஷாராகிவிடுவார்கள் : தங்கள் பேச்சை யெல்லாம் நிறுத்திக்கொள்வார்கள். அதல்ை அவர்களே யாரும் கண்டுகொள்ள முடியவில்லை. இவ்வாறு சூரப்புலி அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆல்ை, பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவானல்லவா? இந்தத் திருட்டுக்கூட்டமும் ஒரு நாள் அகப்பட்டுக்கொண்டது. சூரப்புலி அங்கு வந்து சேர்ந்து எழு மாதங்களாகிவிட்டன. அது நன்ருகக் கொழுத்து வளர்ந்துவிட்டது. ஒரு நாள் அவர்களுக்குப் போதைவெறி அளவு கடந்துவிட்டது. எப்போதும் நிதானம் தவருமல் இருக்கும் முதலாளியும் அன்று வரம்பை மீறிக் குடித்துவிட்டான். அவர்களுக்குள்ளே பேச்சு வளர்ந்தது. ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக்கொண்டும், கூடி நின்று ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள். தாடிக்காரனுக்கு அன்று ஈரல் கறி, தினமும் கிடைப் பதைப்போல இரண்டு மடங்கு கிடைத்துவிட்டது. அதல்ை அவனுக்கு உற்சாகம் கரை கடந்துவிட்டது. ஒரு புட்டி சாராயமும் அவன் வயிற்றுக்குள்ளே புகுந்து அதன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. அவன் சூரப்புலியைப் பக்கத்திலே கூப்பிட்டான். அதைத் தன் இரு கைகளாலும் கட்டிப் பிடித்துக்கொண்டு ஒப்யாரமாக, "ராரி சாரி ராராரோ-என் கண்ணே நீ ராரி ராரி ராராரோ' என்று தொட்டில் பாட்டுப்பாட ஆரம்பித்துவிட்டான். அதைக் கண்டு மற்றவர்களுக்கும் சூரப்புலியிடம் அக்கறை பிறந்துவிட்டது. ஒருவன் அதன் வால்ப் பிடித்துமேலே தூக்க முயன்ருன். ஒருவன்,'டேய்,என் குழந்தையைத் தொட்டால் உதைப்பேன்’ என்ருன். மற்ருெருவன், டேய் என் குழந்தைக்குப் பசிக்கிறது. பால் வார்க்கவேண்டும்' என்று சொல்லிக் கொண்டே சூரப்புலிைையப் பிடித்து அதன் வாய்க்குள் ஒரு புட்டியி லிருந்த சாராயத்தை ஊற்றின்ை. சூாப்புலியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது லபக் லபக்கென்று இரண்டு வாய் குடித்துவிட்டது. அதன் தொண்டைக்குள் எங்கோ தீப்பற்றி எரிவது போலத் தோன் றிற்று. அது திமிறிக் குதித்துக்கொண்டு வெளியே ஒட முயன்றது. தாடிக்காரன் அதன் முதுகில் ஓங்கி ஒரு புட்டியை வீசினன். பிறகு, அதைத் துரத்திக்கொண்டே குன்றின்மீது தட்டுத் தடுமாறி எறி வந்தான். சூரப்புலிக்குத் தலேசுற்ற ஆரம்பித்தது. அது எப்படியோ தடு மாறித் தடுமாறிக் குன்றின் உச்சியில் வழக்கமாகக் காவலிருக்கும் இடத்திற்கு வந்துவிட்டது. தாடிக்காரனும் அங்கு வந்து சேர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/30&oldid=840591" இலிருந்து மீள்விக்கப்பட்டது