பக்கம்:சூழ்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சூழ்ச்சி இரவிலே இதுபற்றி மேலும் கலந்தாலோசித்துத் திட்டம் வகுப்போம். - • (ஹமீர்சிங் எழுந்திருக்கிருன் ஏல் லோரும் எழுந்திருக்கிருர்கள்.) திரை காட்சி நான்கு (ஹமீர்சிங் சித்துருக்குப் போகும் வழியில் ஒரிடத் திலே இரவைக் கழிப்பதற்காகத் தண்டிறங்கியிருக்கிருன். மாலே நேரம். இரண்டு வீரர்கள் முன்னல் காவல் காத்து கிற்கின்றனர். பின்னல் சற்றுத் துாரத்திலே ராணு, மக்திரி, சேனபதி முதலியோரின் கூடாரங்கள் தென்படுகின்றன. பாடினி ஒருத்தி காவல் வீரர்களின் முன் ஆடிக்கொண்டே பாடுகிருள்.) பாடினி : (யாட்டு) காற்றிலேறி வருவோம்-நாங்கள் கடக்லச் சுற்றி வருவோம் ஆற்றிலாடி வருவோம்-நாங்கள் அலேயிலேறி வருவோம் விரவாழ்க்கை யெல்லாம்-பாடி மேன்மை யூட்ட வருவோம் சாரமற்ற வாழ்வைக்-கண்டால் சாடிமோத வருவோம் பாட்டும் பண்ணும் கூட-நாங்கள் பாடியாடி வருவோம் நாட்டு மாந்தர்க்கெல்லாம்-என்றும் நல்ல வாழ்வு சொல்வோம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/24&oldid=840683" இலிருந்து மீள்விக்கப்பட்டது