பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

-مییے۔ --سم۔-- 'செந்தமிழாற்றுப் படை' என்னும் இந்நூல், தற்காலத் தேவைக்கேற்றவாறு, திருவாளர்-வித்துவான், சுந்தர-சண்முகனார் அவர்களால் புதுமுறையில் இயற்றப் பெற்று, நமது கல்விக்கழகத்தின் வெள்ளிவிழாவில் அறிஞர் முன்னிலையிலே அரங்கேற்றமடைந்து வெளிவரும் ஒரு புது நூலாகும்.

தமிழருக்குத் தம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் இருக்கவேண்டிய உணர்ச்சியைத் தூண்டி, அதன் பால் அவர்தம் ஆர்வத்தை எழுப்பி, அதனைக் கசடறக் கற்றுப் போற்றி வளர்க்க இந்நூல் அவர்க்குத் துணைபுரியும் ன்று நம்புகிறோம். எல்லாத் தமிழரும் இதனை ஏற்றுப் பெற்று ஆதரிப்பரேல் கல்விக்கழகத்தின் தொண்டு ஒருவகையில் பயனுடைத்தென்று மனமிக மகிழ்வோம். வாழ்க செந்தமிழ் !

புதுவை
ரா.தேசிகன்


வைகாசி
அமைச்சர்,


51, மே,

கல்விக் கழகம்.