பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"செந்தமிழ் ஆற்றுப்படை-சிறப்புரை. பேராசிரியர், கவியரசு, உயர்திரு. அரங்க. வேங்கடாசலம்பிள்ளையவர்கள் அ ரு ளி ய து

  • எந்தம துள்ளத் தென்றும் ஒளிரும் சுந்தர சண்முகத் தூமணி வழங்கிய அஞ்சுடர்ச் செந்தமிழ் ஆற்றுப் படையினைக் கண்டேன் 1 உள்ளம் களித்தெழ மகிழ்ந்தேன் ! இஃதிப் பிறவியில் எய்துமோர் நல்வினை ! எத்துணை ஆழ்ந்தது 1 எத்துணை அகன்றது ! எத்துணை உயர்ந்தது! என்பன உணர்ந்தேன் ! தமிழனை ஆற்றுப் படுப்பது தமிழனை (அன்னை) தன்பால் ஆற்றுப் படுப்பதாம் தகவல் இருமை நெறியாம் இறும்பூ துணர்ந்தேன் ! பாலுண் சிறுவன் , பசித்தழும் குழந்தையை அன்னைபால் ஆற்றுப் படுத்தலவ் வன்னயை அதன்பால் ஆற்றுப் படுத்தலும் ஆதலின் மும்மை நெறியாம் உண்மையும் கண்டேன் ! இந்நூன் மாண்பெலாம் எடுத்து விரிப்பின் சிறப்புரை என்னும் உறுப்பினில் அமையா(து)