இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118
செந்தமிழ் பெட்டகம்
காலாவதி,மானவிஜயம் என்னும் நாடகங்களும் எழுதினார்.
சம்பந்த முதலியார் வடமொழி நாடகங்களைத் தழுவிச் சில நாடகங்களும்,ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஒட்டிச் சில நாடகங்களும், தாமே சில நாடகங்களும் எழுதியுள்ளார். -
வடமொழி நாடகங்களின் மொழி பெயர்ப்புகளில் மறைமலையடிகள் செய்த காளிதாசனுடைய சாகுந்தலமே சிறப்பாகக் கூறுதற்குரியது.
இக்காலத்தில் நாடகத்திலும் நாடக இலக்கியத்லும் புதியதோர் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தொழில் முறையில் நடைபெறும் நாடகக் குழுவினரும், பொழுதுபோக்கு நாடகக் குழுவினரும் இதற்கு முக்கிய காரணமாவர்.