பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

செந்தமிழ் பெட்டகம்


வேண்டுமென்பதில்லை; நீண்டுமிருக்கலாம். வாஷிங்டன் இர்விங் எழுதிய ரிப் வான்வின்கிள் ஒருவனுடைய முழு வாழ்க்கையையே கூறுகிறது. ஆனால் சிறுகதை இலக்கணம் குலையவில்லை. நுட்ஹாம்சன் எழுதிய பசி என்ற நாவலைச் சிறுகதையாகவே சொல்லி விடலாம். மோப்பசான் வரைந்த லா பருர் என்ற கதை பல ஆண்டுகள் நீண்ட சோகச் சித்திரத்தைத் தருகிறது. எனினும், இது சிறுகதை இலக்கணத்திலிருந்து வழுவவில்லை.

நவீனச் சிறுகதைகள் போல அமைந்து கிடப்பவை இயேசுநாதரின் உபதேசக் கதைகள், பல சிறு கதைகளுக்கு அவை மூலமாய்த் திகழ்கின்றன.