பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருங்கலை கூறும்


கட்டுரைகள்



ரைநடை இலக்கியத் துறைகளில் ஒன்று. ஆசிரியரின் கருத்தையும் நடையையும் காட்டும் கண்ணாடி கட்டுரை விரிவாகவும் இருக்கலாம். சுருக்கமாகவும் இருக்கலாம். ஆனால் நூலைப் போன்று விரிந்து செல்லக்கூடாது. கருத்துச் செறிவும் தெளிவும் தொடர்ச்சியும் அமையப் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியரின் உள்ளப்பாங்கை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச் சுவையோடு எழுதப்பெறும் கட்டுரைகளே மிகுந்த சிறப்புள்ளவை.

வரலாற்றுக் கட்டுரைகள், இயற்கை வருணனை கட்டுரைகள், நகைச்சுவைக் கட்டுரைகள், சிந்தனைக் கட்டுரைகள் எனக் கட்டுரைகள் பலதிறப்படும்.

ஆங்கிலம் முதலான மொழிகளிலே கட்டுரைகள் மிக உயர்ந்த நிலையடைந்திருக்கின்றன; இலக்கியமாக என்றும் சுவைக்கக் கூடிய கட்டுரைகள் வரையப் பெற்றுள்ளன. தமிழிலே இம்முயற்சி அண்மையிலே தான் தொடங்கியது என்று கூறவேண்டும்.

தமிழ்க் கட்டுரை :

தமிழில் கட்டுரை என்ற சொல் பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவே வழங்கி வந்தது, மிகப் பிற் பட்ட காலத்தில்தான் இன்று கூறப்பெறும் 'வியாசம்'