பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

9


 வெளியிடப் பெற்றுள்ள கல்வெட்டுக்களையும் இதுகாறும் வெளியிடப்பெறாத கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து, ஏற்ற குறிப்புக்களுடன் காலமுறைப்படி தொகுதி தொகுதியாகப் பதிப்பிக்க வேண்டும்.

2. தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் பயின்றுள்ள சொற்களுக்கு விளக்கக் குறிப்புக்களுடன் ஒர் அகராதி தயாரிக்கப்பட வேண்டும்.


3. தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களில் உள்ள கவிதைகள் அனைத்தையும் தொகுத்து விளக்கக் குறிப்புக்களுடன் நூலுருவில் வெளியிட வேண்டும்.


4. இது வரை வெளிவந்துள்ள தமிழ் நாடு சம்பந்தப்பட்ட 'கல்வெட்டு அறிக்கைகள்’ (Epigraphical Reports) தக்க அடிக்குறிப்புகளுடன் பதிப்பிக்கப் பெற வேண்டும்.


5. தமிழ் நாட்டுச் செப்புப் பட்டயங்கள் பலவும் புகைப்படங்கள் எடுக்கப்பெற்றுத் தக்க விளக்கக் குறிப்புக்களுடன் நூல்வடிவில் வெளி யிடப் பெறவேண்டும்.