பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்




XXII. ஆண்டு நுால்

ஆண்டுதோறும் தமிழ் நால்களின் ஆண்டு நுால் (year book) ஒன்று வெளியிடப் பெற வேண்டும். அதில் அகர வரிசையில் தமிழ் எழுத்தாளர் ஒவ்வொருவரும் அந்த அந்த ஆண்டில் வெளியிடும் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் முதலியனபற்றிய விவரங்களைப் பிரசுரிக்க வேண்டும்.

XXIII. பிற நாடுகள், இனங்கள், இலக்கியங்கள் பற்றிய தமிழ் நூல்கள்

1. இந்திய தேசிய இனங்கள் பற்றியும், உலக நாடுகளில் உள்ள இனங்கள் பற்றியும் தனித்தனியே அந்த அந்த இனங்களின் பொது வரலாறும் சிறப்பும் பற்றிய ஒரே வடிவான வரலாற்று நூல்கள் தமிழில் வெளியிடப் பெற வேண்டும்.

2. பிறமொழிகள், இலக்கியங்கள் பற்றித் தமிழில் ஒரே வடிவான வரலாற்று நூல்கள் வெளியிடப்பெற வேண்டும்.