பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்




XXVI. நுால் நிலையங்கள் வாயிலாக ஆராய்ச்சி

சென்னையில் உள்ள ஆவணக் களரியிலும் தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலையத்திலும் தக்க அறிஞர்களை நிலையாக நியமித்து அவ்வப் போது அந்நிலையங்களில் உள்ள ஆவணங்கள்---நுால்கள் துணைக்கொண்டு புதிய ஆராய்ச்சி நுால்களும் பதிப்புக்களும் பிறவும் வெளி வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

XXVII. தட்டெழுத்து-சுருக்கெழுத்து

1. வருங்காலத்தில் நிருவாகத் துறையிலும் பல்கலைக்கழகத்துறையிலும் தமிழின் ஆக்கம் பெருமளவிற்குக் தட்டெழுத்து, சுருக்கெழுத்து வளர்ச்சியைப் பொறுத்துள்ளது.

2. அரசாங்கம் தமிழில் தட்டெழுத்தும் சுருக்கெழுத்தும் பயின்றார்க்கு அலுவலகங்களில் தக்க உயர்வு கிடைக்கும் என்றும், நியமன காலத்தில் சலுகை காட்டப்பெறும் என்றும் அறிவித்தல் வேண்டும்.