இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்
XXXI. வானாெலிப் பேச்சுக்கள்---நாடகங்கள்
தமிழ் நாட்டு வானாெலி நிலையங்களில் பேசப்பெறும் பேச்சுக்கள்---நடிக்கப் பெறும் நாடகங்கள் ஆகியவற்றுள் சிறந்தனவற்றைத் தேர்ந்து, ஆண்டுதாேறும் தொகுதி தொகுதியாக வெளியிட வேண்டும்.
XXXII. தனித்தனி கலைக்களஞ்சியங்கள்
I (1) தமிழ் மாெழி
(2) தமிழ் நாடு
(3) தமிழ் இலக்கியம்
(4) தமிழ்ப் புலவர்கள்
(5) தமிழ்க் கலைகள் ஆகியவைபற்றித் தனித்தனி கலைக்களஞ்
சியங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
II. பல்வேறு துறைகளிலும் வகைகளிலும் இலங்கையில் தமிழ் தனித்தன்மையோடு வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் பல்துறை வளர்ச்சியைக் காட்டும் வகையில் 'இலங்கைத் தமிழும் தமிழரும்' என்பது பற்றி ஒரு கலைக் களஞ்சியம் தயாரிக்கப் பெற வேண்டும்.