பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதக்காதியின் குடும்பமும், காலமும் வள்ளல் சிதக்காதியைப்பற்றி கிடைத்துள்ள செய்திகள் அனைத்தும் அவர் ஒரு சிறந்த கொடையாளி என்பதை யு மர், தமிழiப் புலவர்களால் பெரிதும் பாராட்டப் பட்ட வரி என்பதை மட்டுமே குறிப்பிடுகின்றன. அத்துடன் அவரது குடும்பத்தினரைப் பற்றியோ அவர் பிறந்த நாளையோ அல்லது மறைந்த நாளையோ குறிப்பிடுபவனாக இல்லை. இதற்கு முக்கியமான காரணம் வள்ளல் அவர்கள் பிறந்து வளர்ந்து வாழந்து மறைந்த கிழக்கரையிலேயே அவரைப்பற்றிய ஆவணங்களை பத்திரப்படுத்திவைக்க தவறியதே ஆகும். வள்ளல் சீதக்காதி அவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபத்துறையில் மிகுதியாக ஈடுபட்டிருந்தார் என்பதை முன்னர் பார்த்தோம். அந்த வாணிப அமைப்பின் ஆவணங்களும், கடிதத்தொகுப்புகளும், பேரேடுகளும் கீழக்கரையிலிருந்த அந்த அமைப்பின் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டும் ஆனால் முன்னுறு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பொழுது அவைகள் இல்லை என்ற