பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம்.கமால் <oচ> Toyoos. 33ao,73 GWFLZ73&TZooZoology «C& Y தெரிய வருகின்றது. இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் வள்ளலது திருமணத்தைப் பற்றி பாடிய எட்டையபுரம் உமர் கத்தாப் புலவர் தமது வாழத்தில் "பிந்தாத செல்வம் பெரியதம்பி கண்மணியாய் மந்தார தாருவென வந்த செய்தக் காதிமன்னன்” கண்ணினண் 64 என சீதக்காதியின் தந்தை பெரியதம்பி எனக் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது. மேலும் இராமநாதபுரம் வட்டம் வேதாளை ஊரில் அடக்கம் பெற்றுள்ள சீதக்காதி மரைக்காயரது மூத்த சகோதரர் சேகு இப்ராஹிம் மரைக்காயரது அடக்கவிடத்தில் நடப்பட்டுள்ள மீஸான் கல்லில் சேகு இப்ராஹிம் மரைக்காயரது முந்தையோர் ஐவரது பெயர்கள் வரிசையாக குறிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலின்படியும் சேகு இப்ராஹிம் மரைக்காயரது தந்தை பெரியதர்பி என விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை கிழக்கரை நகர் நடுத்தெருவிலுள்ள சீதக்காதி வழியினர் ஒருவரிடம் இருந்து பெற்ற வம்சாவழிப்பட்டியலும் உறுதி செய்கின்றது. இந்தப்பட்டியலில் சீதக்காதி மரைக்காயரது தந்தை பெரிய தம்பி என்றும் அவர் உடன் பிறந்தவர்கள் மூத்தவர் சேகு இப்ராஹிமர் மரைக்காயர் இளையவர் லெப்பை நெய்னார் மரைக்காயர் என்றும் தெரிவிக்கின்றது. மேலே கண்ட இந்த மூன்று. ஆதாரங்களில் சீதக்காதியின் தாயார் பெயர் என்ன என்பது அறியத் தக்கதாக இல்லை. மற்றும் சீதக்காதி மரைக்காயருடன் உள்நாட்டு வெளிநாட்டு வாணிகத்தில் போட்டியாளராக இருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது ஆவணங்கள் சீதக்காதி மரைக்காயரது தந்தையாரைப் பற்றிய செய்திகளைத் தவறாகக் கொடுத்து விஷயத்தை மேலும் குழப்பமடையச் செய்வதாக உள்ளன. இந்த ஆவணங்களைப் பற்றி விமர்சனச் செய்துள்ள ஆய்வாளர் சஞ்சப் சுப்ரமணியன் என்பவர் பெரியதம்பி என்பது ஒரு தனிப்பட்ட மனிதரை மட்டும் குறிப்பிடுவதாக இல்லை என்றும் اس -ا