பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி மேள முழங்க விருதுசின்ன மார்ப்பரிக்கத் தாள மதிரத் தவில்முரசு தாம்கறங்க 113. ஏத்தரிய நல்லோரு மெல்லோருங் கையேந்திப் பாத்திகா வோதிப்பரிந்து துவாவோதி 114. நானில்மெல் லாமதிக்க நன்முகிழ்த்த வேளைதனில் கானுலவு செம்பவளக் காலெடுத்து நாட்டினரே цѣ5бо «мершоишѣ знарѣзттартѣ 115. மறுக்கலவாச் செம்பொன் வளைபரப்பி வெள்ளியில்ை குறுக்கு வலையதன்மேற் கொண்டு பரப்பினரே 16. வச்ர மிழைத்து வரிச்சுக் களைப்பரப்பிப் பச்சை மரகதத்தால் பலகணிவா யில்வகுத்துச் 117. செங்கனகக் கம்பியினுல் சேர வகுந்திறுக்கித் தங்கத்தகட் டால்வேய்ந்து சாளாங்கள் தாம் வகுத்தார் 118. மாணிக்கத் தாலே மணிக்கொடுங்கை தான்சேர்த்து ஆணித் தரள மணியணியாய்த் தூக்கினரே 119. நீல மணியும் நிறைந்தகோ மேதகமுங் கோலவயி டுரியத்தின் கோவையுடன் தூக்கினரே 120. பொங்கொளிசேர் கின்ற புருடரா கச்சரமும் எங்குமொளி வீசு மிலங்குபவ ளச்சரமும் 121. பதுமரா கச்சரமும் பத்திபத்தி யாய்த்துக்கி நிதிகுலவு முன்முகப்பு நித்திலத்தில் வேய்ந்தனரே 122. மல்லிகையுஞ் செம்பகமும் வாய்ந்தகுட மல்லிகையும் முல்லையொடு பிச்சி முறைமுறையாய் முன்துக்கிச் 123. செங்கழுநீர் வெண்டாழை செந்தாழை பைங்கமலத் தங்குமலர் பாதிரிமந் தார மிருள்வாசி 124. செவ்வந்தி பொற்கொன்றை செவ்வாம்பல் மாதுளம்பூ அவ்வந்தி நேர்மலர்ந்த அழகிய நீ லோற்பலமும் حا ད།༽