பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<35- - வள்ளல் சீதக்காதி. نتيجة r ר 189. நெருங்குஞ் சிலம்பாட நீள்சதங்கை தாடை மருங்குதுவண் டாட மயிலார் நடமாடத் 190. தங்கத் தீவட்டி தயங்குவெள்ளித் தீவட்டி கங்குல் பகலாக்கு மாறுகால் பந்தமுடன் 191. ஏணி விளக்கும் ரதவிளக்குத் தன்னுடனே பாணி விளக்கும் ரதவிளக்கும் நின்றிலங்கச் 192. சூல விளக்குத் துலங்கைந்து கால்விளக்கும் ஞாலம் விளக்கும் பகலா மெனவிலக 193. பத்தியொளி வீசும் பகல்வத்தி நின்றொளிரத் தத்துதிரை போலுபய சாமரைக டாமிரட்டப் 194. பாவாடை முன்விரிக்கப் பஞ்சவண்ணத் தால்விளங்கும் பாவாடை வீசவியற் பாவாணர் கொண்டாட 195. எங்கும் புகழ்வெள்ளை யானைப் பிடரேற்றி மங்களஞ்செய் தூரைவல மாகவரு வேளைதனில் 196. வச்ரத் திருநாட்டு மன்னவன்செய் தக்காதி பச்சைப் பரியான் பவனிவரும் வீதியெல்லாம் 197. தோரணங்கள் நாட்டிடுவார் தூபதி பங்கள்வைப்பார் பூரணகும் பம்பதிப்பார் பூம்பன்னி ரால்தெளிப்பார் 198. வான்முகட்டுத் தோயும் மகமேரு நாட்டிடுவார் தேன்முழக்கும் பூங்குறிஞ்சி தெருக்க ளலங்கரிப்பார் 199. இருகுரும்பை போலுமுலை யேந்திழையா ராடுதற்குத் திருகுகம்பை நாட்டித் தெருவை யலங்கரிப்பார் 200. மெல்லியதண் புட்ப விமானங்கள் தம்முடனே சொல்லரிய நீண்மகர தோரணங்கள் நாட்டிடுவார் 201. கைவந்த சித்திரத்தாற் கண்களிக்கச் செய்துவைத்த பெளவந்தத் திற்குத்ரப் பதுமைபிடித் தாட்டிடுவார் 202 ஆசைகொள்ளு மினனு ரவரவர்கள் தாங்கூடி வாசல்தொறும் நெய்விளக்கு வைத்துநிறை கும்பம் வைப்பார்