பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து <་[6རྐྱེ>། י 394 நாக்குத் திருந்துமொழி நங்கையருங் கொங்கைகொண்டு மூக்குத் திருந்த முழுமணிப்பொற் கெண்டிகளும் 395. பெய்தக்கால் காந்தி பெருகுதங்கப் பள்ளையம் போற் செய்தக்கால் நம்மையெனச் சேனைக்கா லுங்கொடுத்தார் 396. பூங்கா வனமும் புதியதென்னஞ் சோலைகளும் நீங்காமல் மங்கையர்கள் நீராடும் வாவிகளும் 397. பாலுக் கெருமை பசுமாடும் ஆடுகளும் மேலுக்கு மேலுமெண்ணி வீறுபெறத் தாம்கொடுத்தார் 398. வையம் மகிழ்ந்திடநன் மாம னெழுந்திருந்து செய்யும் வரிசையெல்லாம் செய்தோம் எனக்கொடுத்தார் церот ситуb53ысот 399, இந்த வரிசைபெற்ற ஏந்திழையு மன்னவரும் மைந்தர்பதி னுறும் வகையாகப் பெற்றெடுப்பீர் 400. பொன்னு மணியும் பொருத்துதல்போ லேபொருத்தி எந்நிலமுந் தான்வாழ எப்போதும் வாழ்ந்திருப்பீர் 401. நன்றி பெறுவீர் நயம்பெறுவீர்ஆண்பெறுவீர் என்றுந் துனியாவில் ஈமான் மிகப்பெறுவீர் 402. குன்றில் விளக்காய்க் குலவிளக்காய் ஒங்கிநிலை நின்ற பெரும்புவிமேல் நீடுழி வாழ்ந்திருப்பீர் 403. துய்ய ஈசுபு துணையாம் சுலைகாபோல் வய்ய நடு எந்நாளும் அன்பாக வாழ்ந்திருப்பீர் 404 சுலைமா னன்னபியும் தோகைபல் கீசையும்போல் அலையாத செல்வமொடும் அழகாக வாழ்ந்திருப்பீர் 405. மன்றாட்ட முள்ள மகம்மது கதீஜாபோல் நன்ற யிரும்வீரும் நலமாக வாழ்ந்திருப்பீர் 406. விளங்கும் அலி யுல்லாவும் வீவிபாத்து முத்தை யும்போல் வளங்குலவ மேன்மேலும் வாகுபெற வாழ்ந்திருப்பீர் வள்ளல் சீதக்காதி திருமண வாழ்த்து முற்றிற்று. اس۔