பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (குறிப்பிட் டுள்ளனர். இதனை அடியொற்றி வள்ளல் சீதக்காதியைப் பற்றி தில்லி யைச் சேர்ந்த சஞ்சய் சுப்ரமணியன் என்பவர் வரைந்த கட்டுரையிலும், அப்பொழுது கிழக்கரையில் மூன்று பேர் பெரியதம்பி என்ற பெயருடன் இருந்தனர் என குறிப்பிட்டுள்ளார். டச்சுக்காரர்களுக்கு ஏற்பட்ட குழப்பர் அவர்களது ஆவணங்களைப் படித்த இந்தக் கட்டுரையாளர்களுக்கும் ஏற்பட்டதில் வியப்பில்லை. ஏனெனில் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள வள்ளல் சீதக்காதி அவர்களைப் பற்றிய ஆவணங்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆகியவைகளிலிருந்து வள்ளல் சீதக்காதியின் தந்தையாருக்கும் அடுத்து வள்ளலுக்கும் பெரியதம்பி என்ற பெயர் இருந்து வந்தது தெரிய வருகிறது. வேதாளை கிராமத்தில் அமைந்துள்ள வள்ளல் சீதக்காதி அவர்களது சகோதரர் சேகு இப்ராஹிமின் கல்லறை நடுகல்லில் I ר பெரிய தம்பி மரைக்காயர் சேகு இபுராகிம் மரைக்காயர் 71 என்ற வாசகம் சீதக்காதி மரைக்காயரது தந்தையார் பெயர் " பெரியதம்பி " என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதனைப் போன்றே சீதக்காதி மரைக்காயரை சீதக்காதி திருமண வாழத்தில், “தேடும் புகழ்க்கவிதைச் செந்தமிழோர்க் கீந்துதவும் நாடும் விசையரகு நாதப் பெரியதம்பி” என புகழந்து உரைப்பதிலிருந்தும் மற்றும் ஏனைய டச்சு ஆவணங்களிலிருந்தும் சீதக்காதி மரைக்காயருக்கும் பெரியதமர்பி என்ற பெயர் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது தெரிய வருகிறது. நல்ல உயரம், சிவந்த மேனி, முழங்காலைத்தொடும் நீண்ட கரங்கள், யாரையும் வசீகரித்து தம்மவராக்கும் தன்மை கொண்ட குறுநகை யுடைய அழகிய முக ச். அதிலே لـ فا