பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

101


அவ்வண்டு அதனைக் காரணம்வினவ, அது தன் ஈயரசி பிறந்துபட்டதாகவும், அதற்காங்கடன்கள் நடைபெறுவதாகவும், ஆண்டு ஏனைய ஏகுதல் கூடாதெனவும் கூறிற்று.

கூறலும், அக்களிவண்டு, உளங்கலங்கி, "ஐயோ! எவ்வாறு இறந்தனர் நம் அரசியார்! ஆ!நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்னருயிர்த்தே மலர்தலை யுலகம் ஆ! இனி நமக்குத் தலைமை தாங்கி நம்மை நன்னெறியில் நடாத்துவார் யாவரோ ஏ!காவல! நம் அரசியார் இறந்தது. உண்மையோ கூறுக."என இணைந்து கூறலும், அது, “ஆம். ஆம். இன்றுகாலை கூட்டைக் காக்கும் ஈக்களுட் சில வெளிச்சென்றிருந்த பொழுதை நோக்கி, இளமைமிக்க ஈயரசியொன்று, வெளிப்போதல் கூடாது எனினும், போதந்து, நம் அரசியொடு கலாய்த்துக் கொன்று விட்டது" என்றது.

முடிவில் அக்களிவண்டு தன் அரசி சாதற்கு அடிப்படையாக நின்றது தானே என்பதையும், தன்னா னிகழ்ந்த குழப்பத்தின் பயனே இது வென்பதையும் நினைத்தொறும் அதன் நெஞ்சு அதனைச் சுட்டது; பின்னர் அம்முதிர்வண்டு களிவண்டை நோக்கி, “ஈயரசுகட்கே ஒத்தநிலைமையின்று; அவை பிறப்பினால் ஒத்தன வேனும் தம் தொழிலாற்றான் சிறப்படைகின்றன: ஆதலின், பிறப்பொத்த தோற்றத்தேம் எனினும் சிறப்புறு தொழிற் செய்து உயர்வுபெறுதலன்றோ அமைவுடைத்தாம்"என்றது.

நெஞ்சு சுட வருந்திய அவ்வண்டும் பின்னர்த்தன் தொழினாடி மலர் வனம் புக்கது. யாண்டும் அமைதியே நின்று விளங்கிற்று.