பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

119



தாய் தன் மகளது எவ்வம் உணராளாயினள்; அதனால் அன்புடைய அவளது நல்ல நெஞ்சம் மயங்குவதாயிற்று; வேலனைக் கொண்டு வெறியெடுக்க நினைக்கின்றாள் என்பது இதனால் தெரிகிறது.

இனி வெறியாடும் வேலன் கூறுவதை முன்னறிந்து,

"அன்னை தந்த முதுவாய் வேலன் எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் தணி மருந்து அறிவல்" என்பன, அவ்வாறு கூறுவானாயின், நாம் தலைவன் கெடுதி வினாவி வந்து தலைப் பெய்ததைக் கூறி "வினவின் எவனோமற்றே? கனல் சின மையல் வேழமெய்யுளம் போக ஊட்டி அன்ன ஊன்புரள் அம்பொடு காட்டுமான் அடிவழி ஒற்றி வேட்டம் செல்லுமோதும் இறை எனவே” என்று மொழிகின்றாள்.

"நும்மிறை வேட்டம் செல்லுமோ?" என்றால், அவன் "அவ்வாறு செல்வோன் நம் இறை" என்று உணர்வான்.

ஊன் படிந்து உதிரம் வாரச் செக்கர்ச் செவேலெனச் சிவந்து தோன்றும் அம்பினை "ஊட்டியன்ன ஊன்புரள் அம்பு" என்று பாடியுள்ளாரே, இப்புலவர் யாராக இருக்கலாம்? ஊன்மிகப் பற்றிப் புரளும் அம்பினை, ஊன் ஊட்டியது போன்ற அம்பு என்கின்ற இவர் "ஊட்டியன்ன ஒண்தளிர்ச் செயலை" (அகம் 68) எனப்பாடிய புலவரான அவரோ என்னும் நினைவு பிறக்கிறதன்றோ? அவரே தான் இதனைப் பாடியவரும். அவர் பெயர் ஊட்டியார் என்பது.