பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

செம்மொழிப் புதையல்



பொருட்டேயாம். ஆகவே, அவன் கற்கும் நூல்களுள் இப் பொருண்மொழிகள் இடம் பெறாவாயின், அவையும் அவற்றைப் படிக்குங்காற் கழிந்த பொழுதும் பயன்படாதொழிவனவேயாகும். ஆகவே, இப்பொருண்மொழி ஒவ்வொரு நூலிலும் அமைதல் இன்றியமையாதாம்.

நாம் வாழும் இக்காலமும், நம்மனப் பான்மையும் புதிய வுணர்ச்சியும் ஒழுக்கமும் கொண்ட முன்னேற்ற மென்னும் பொருளால் இழுக்கப்பெறுகின்றன. "ஒரு ஊரின்கண் ஒரு அரசன் இருந்தான் - என்று தொடங்கும் சுவடிகள் மறைகின்றன; இன்னயாண்டில் இத்திங்களில் இந்நாளில் இந்நிகழ்ச்சி" நடைபெற்றதென்னும் முறை எழுந்து நிலவுகின்றது. எப்பொருளைக் கேட்பினும், எப்பொருளைக் கற்பினும், அப்பொருளைக் கேட்டவாறோ, கற்றவாறோ உணர்த லின்றிப் பல்வகையினும் ஆராய்வதும், முடிபுகூறுதலுமே எங்கும் விளங்கித் தோன்றுகின்றன. இங்ஙனமே நம்பண்டை வரலாறும், அறிதல் வேண்டுமென்னும் அவா நாகரிகமும் எங்கும் எல்லோரு மனத்திலும் எழுந்துலவுதலைக் காண்கின்றோம். இவ்வுணர்ச்சி மிக்குஎழும் இக்காலத்தில், ‘பண்டை வரலாற்றாராய்ச்சியும், பொருளியல்புணர்ச்சியும்,அரசியல்கிளர்ச்சியும் விரவிச் செல்லும் இக்காலத்தில், மக்களியல்பையும் ஆராய்தல் வேண்டுமென்பது கூறாமலேயமையும். மக்களியல்பு பொருண்மொழிக்கண் அடங்கி பருத்தலால், அவ்வாராய்ச்சி பொருண்மொழியாராய்ச்சியேயாயிற்று. இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் பொருண் மொழிகளைக் கூறவல்லவர் ஒருவர் வேண்டுமன்றே. அவர்யார்? அவரே நம்புலவர் பெருமக்கள். அவரே, உலகில் நாம் வாழ்வினியல்பையுள்ளவாறேயுரைக்கும் ஆற்றல் படைத்தவராவர்; சில உண்மைகளையும் மெய்ம்மைகளையும் எடுத்துரைக்கும் சிலரினும், இவர்கள் போற்றற்குரியர். புலவர்களின் செயல் நிலைவனப்பும் தூய்மையும் நிறைந்தது. சரித்திரங் கூறுதல், ஒழுக்கநெறியமைத்தல், அரசியலாராய்தல், சொற்பொழிவு செய்தல் ஆகிய இவையாவும் ஒருவனது உலகியலறிவின் திட்பநுட்பத்துக்கேற்ப வமைந்தனவாம். ஒழுக்கநெறியும், சரித்திர் முறையும், அரசியல்வாதமும்,