பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

செம்மொழிப் புதையல்


உகிருடை யடிய வோங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையோ டுழிஞை சூடிப்
பேய்க்கண் ணன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை யதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கி.”

அவருடைய ஆர்களைப் பெரும் பாழ் செய்தும் அமையானாய்,

‘மலையகழ்க் குவனே கடல்துர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற்றுவ னெனப்'

பெருமறஞ் செருக்கி மேம்பட்டான். அது கண்ட ஒளியர் பணிந்தொடுங்கினர்; அருவாளர் தொழில் புரிந்தொழுகும் தொழும்பராயினர்; வடவர் வாடினர்; குடவர் கூம்பினர்; தென்னவர் திறலழிந்தனர்.

இந் நிலையில் சோழ நாட்டின் இடையிலும் எல்லையிலும் வாழ்ந்த பொதுவரும் இருங்கோவேளிரும் குறும்பு செய்தொழுகினராக, அவர்களை யடக்கி, அவர்கள் இருந்துகொண்டு குறும்பு செய்த காடுகளை அழித்து நாடாக்கி, அந் நாடுகள் வளம் பெறக் குளந் தொட்டு, பகைவர்களால் உறையூர்க் குண்டான கேடுகளைப் போக்கித் திருத்திப், பண்டுபோல் கோயிலும் அரணும் ஏற்படுத்திப், பவைர்க் கஞ்சிச் சென்ற பழங்குடிப் பெருமக்களைக் குடிநிறுத்திப் போர் நேரில் பொருவே மல்லது, ஒருவேம்’ என்ற சிறப்புரை கிளந்து திகழ்ந்தான், கரிகாலனாகிய செங்கோல் வளவன் என்று இனிது மகிழ்ந்து பாடுவாராய், நம் கண்ணனார்.

“புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசாயக்
கரடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிப்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநீறீஇப்
பொருவேமெனப் பெயர் கொடுத்து
ஒருவேமெனப் புறக்கொடாது