பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

259


வீடின் மணியருவி வெண்மலையும்
கைப்பிடித்தான் வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே.”

“வலம்புரிவாய் வைத்தான் வார்சிலைகைக் கொண்டான்,
சலம்புரி சண்டை தலைபணிப்புக் கண்டான்,
பொலம்புரி தாமரையாள் பொன்னாகம் தோய்ந்தான்,
கலம்புரிவண்டடக்கைக் கார்மேக வண்ணனே" (சுயம் ௱௱௮)

என்ற பாட்டுக்களால் இனிது காணலாம்.

இனி, இப்பெரியோர்களுள் திருத்தக்கதேவர் ஏனையோரைக் காட்டிலும் உலகியலில் மிக்க தேர்ச்சி யுடையவராக விளங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் தாம் பரப்பக் கருதும் சமயப் பொருள் குறித்த இந்த நூல், தமிழ்நாட்டில் பரவியிருக்கும் சமயப் பொருளைப் புறங்கூறுவதாயிருப்பினும், தம் சமயப் பொருளையே நிரல்படக் கூறுவதாயிருப்பினும், தமிழர்களால் ஆதரிக்கப்படுவது இல்லையாம் என்பதை நன்கு உணர்ந் திருந்தனர். அம் மதிநுட்பத்தால், தமிழ்நாட்டிற் பயின்றிருந்த வைதிக சமயக் கதை நிகழ்ச்சிகளை இந்நூற்கண் உவமமுகத்தாற் பயில வழங்கியுள்ளார். அதனால் இந்நூல் சமயக் கொள்கையால் வேறுபட்ட தமிழர் பலராலும் ஆதரிக்கப்பெற்ற தென்பது நாட்டில் வழங்கும் கதைகளால் நாம் அறிகின்றோம். இவ்வியல்பினைக் கடைப்பிடியாமையாற்றான், தேம்பாவணி, சீறாப்புராணம் முதலியன தமிழரிடையே நன்கு வழங்காதிருக் கின்றன போலும். இவ்வியல்பினை மூன்று இயல்களாற் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

தேவர் காலத்தே, தமிழர் தேவர்கள் இமையா நாட்டம் உடையரென்றும், அவர்கட்கும் அசுரர்கட்கும் பகைமையிருந்து வந்ததென்றும், அதனால் தேவர்கள் அடிக்கடி துன்புற்றன ரென்றும், தேவர்கள் திருமாலின் உதவியால் கடல் கடைந்து இனிய அமுதம் பெற்று மகிழ்ந்தனரென்றும் கேட்டிருந்தனர். அந் நிகழ்ச்சிகளைத் திருத்தக்கதேவர் தாம் சமயத் தொண்டு குறித்துப் - சீவி.க.சிந்தாமணியின்கண் குறித்திருக்கின்றார். கட்டியங்காரன் சச்சந்தனைக் கொல்லக் கருதி அமைச்சரோடு சூழ்ந்த காலத்தில் அமைச்சருள் தருமதத்த்ன் என்பான் கூற்றில் வைத்து, "இறங்கு கண்ணிமையார் விழித்தேயிருந்து, அற்ங்கள் வவ்வ அதன்புறம் காக்கலார்" (௨௱௪௰௮) என்றும், தேவர்கள் கடல் கடைந்து அமுது பெற்ற செய்தியை, பதுமுகன்