பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உரைவேந்தர் பற்றிப் பாவேந்தர்


அவ்வை துரைசாமிப்பிள்ளை அருந்தமிழின்
செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ - இவ்வையம்
எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள்
சிக்கலின்றித் தந்தான் தெளிந்து.

புறத்தின் உரைகள் புலமைத் திறமை
வரலாறு பேசும் மகிழ-உறவாடும்
பாட்டின் குறிப்பெல்லாம் பண்பாட்டுச் சங்கத்தேன்
கூட்டில் விளையும் கொடை.

நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத்-தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு.

இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில்-உரமுடையான்
தன்கடன் தாய் நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு.

பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை - வெள்ளத்தேன்
பாயாத ஊருண்டா? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்!

3