பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

செம்மொழிப் புதையல்


செய்தலும் அறனல்ல. அதனால் விலக்கப்பட்ட வுணவையே யளிக்குமாறு கூறல் நின் அறிவுடைமைக் கழகன்று; அமைதியுமன்று.

பருந்து:- அன்பே பொறுத்தருள். இனிய உளவாக, இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந்தற்று என்பதை நினைத்தருள்க. நிற்க, இவற்றின் தாய்ப்பூச்சி இவ்வுண்மையினை யறியாது. அது பெரும்பேதை, அன்றியும் யான் கூறுவனவற்றை யுறுதி நோக்குடன் கேட்பலெனக் கூறி, கூறக்கேட்டலும், உண்மை நோக்காதொழிதல் நின் உயர்வுக்குக் குறையன்றோ! அறிவும், அமைந்த நம்பிக்கையும் அமைவுறினன்றோ வுண்மை தெள்ளிதாம்.

புழு :-ஒ! அற்றன்று. என் செவிப்புலனாம் பொருள் பலவற்றினும் அமைவுறும் உண்மைப்பொருள் காண்டலே என்னியல்பு. உறுதிநோக்கும், உண்மை நம்பிக்கையும் உடையாரின் மிக்கார்த்தேரின், யானலதில்லை இவ்வுலகத்தானே என்பதை மீட்டும். நினக்கு வற்புறுத்துகின்றேன். அறிக!

பருந்து:- அறிவதென்! நின்சொல்லின் வலியின்மையை நின் சொற்களே நன்கு காட்டுகின்றன. யான் கூறும் உணவுப் பொருளையே நீ முதற்கண் ஏலாதொழியின், பின்னர்க் கூறப்போவனவற்றை நீ எங்ஙனம் ஏற்றல் அமையும்? நிற்க, இப்பச்சிளஞ் சினைகள் பொரித்தலும் என்னாமென நினைக்கின்றனை? இதனையேனும் உண்மையாகக் கூறுதி.

புழு :- என்னாம்! விதையொன்று போடப் பதமொன்று விளையுங் கொல்! ‘பண்டு செய்வினையலாற் பரவுதெய்வமொன் றுண்டெனில், தான் பயன் உதவ வல்லதோ’ என்னும் செம்பொருளையும் தெளிக. ஆகலின், சேடத்தின் சினை சேடமா மேயன்றிக்கீடமாகா.

பருந்து:-அற்றன்று. சேடத்தின் சினை சேடமாகாது முதற்கட் கீடமே யாம். உண்மையைக் கூறின், அவை