பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

79


ஒல்லுவ தொல்லும் என்பதே சிறந்தது. மிகுத்துக் கூறல் மிக்க ஏதமே தரும்.

குறும்புள் :- அற்றேல், நீர் அவ் வறியாவுலகிற்குப் போகீர் போலும்!

புறவம் :- ஒருகாலும் இல்லை. முதற்கண், யானுறையு மிடம், முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும், வழங்கத் தவா வளப்பமும், விழைவு விடுத்த விழுமியோர்க்கும் விழைவு தோற்றுவிக்கும் விழுப்பமும் வாய்ந்தது. ஆகலின் யான் வேறிடம் விரும்பேன். மேலும், பெற்றது கொண்டு பெறும் பேறே பேறெனப்படுவது. இரண்டாவதாக, கேட்கப்படுவன யாவும் வாய்மைய என எளிது ஆராயாது கொள்ளும் நூம்மோரன்னோர் போலும் சிற்றறிவுடையேன் யானலன். அன்றியும், நீர் கூறும் உலகமொன்று உண்டென்பதையேனும் யான் எங்ஙனம் அறிவது?

குறும்புள் :- என்னை ஈன்றோர் எனக்கு அருளினர்.

புறவம் :-ஈன்றோர்களோ கூறினர் அங்ஙனமா அற்றேல், நீ மிகமிகச் சீரியதோர் பறவையே! நின் ஈன்றோர் கூறுவனவற்றைக் கூறியவாறே உளங்கொளும் நீர்மை வேண்டற்பாலதே அவர்கள் ஒருபகல், நீ செஞ்ஞாயிற்றைச் சென்று சேர்ந்து வாழ்தலுங் கூடும் என்பராயின், நீ ஆமென்றே கொள்ளுவாய் போலும்!

குறும்புள் :-(சீறியது போல்) ஈன்று புறந்தந்த என் குரவர் ஒருபொழுதேனும் என்னை வஞ்சித்ததின்றே!

புறவம் :-என்னை, யென்னை வெகுளுவதென்னை? என்னை செய்தி நின்பெற்றோர் நின்னை வஞ்சித்தனர்; வஞ்சர் என்று ஒருவரும் கூறிற்றிலரே! அவர், நின்னை வஞ்சித்திலராயின், ஒன்று கூறுவேன், அவர் பேதையரே. அன்றேல், பொருளறியாதாரே. நூம்மோரன்னோர் மாட்டு ஒன்றுகூறல் விழைவோர்,