பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

101



போய்விடுமே! அதுபோல், உள்ளத்தில் உறுதி இருந்தால் அஃது எப்பொழுதும் ஒருவரை விட்டுப் போகாது என்பார் திருவள்ளுவப் பேராசான்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

(592)

இனி, இன்னுஞ் சொன்னால் அறிவு என்பது வேறு ஒன்றும் இல்லை. உள்ள உறுதிதான் அறிவு ஆகும். உள்ளத்தில் உறுதியில்லையானால் அந்த அறிவுதான் எதற்கு மேலும் உறுதியில்லாத உள்ளம் உடைய ஒருவனை மாந்தன் என்று கூற முடியாது. மரம் என்றுதான் கூற முடியும். மரத்திற்கு அறிவும், செயல் முயற்சியும் இல்லாதது போலவே இவனுக்கும் அவை இல்லையாகிவிடும் என்பார் திருவள்ளுவர்.

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்

மரம் மக்கள் ஆதலே வேறு

(600)

உரம் என்பது அறிவு. உள்ள வெறுக்கை என்பது உறுதியின் மிகுந்த - தன்மை.

மேலும் உறுதி, அஃதாவது ஊக்கம் இல்லாத அறிவு செயலுக்குப் பயன்படாது. வெறும் அறிவால் மட்டும் பயனில்லை. இது செயலுக்குப் பயன்பட வேண்டும். எனவே, மேலும் மேலும் அறிவைப் பெறுவதையே ஒருவன் விரும்பிக் கொண்டிராமல், இதுவரை பெற்ற அறிவுக்குரிய செயலைச் செய்து கொண்டே மேலும் அறிவு பெறுவதுதான் வாழ்க்கைக் குரிய பயனைத் தருவது ஆகும்.

6. தன்னை அறிவித்தல்

இனி, ஒருவன் பிறந்து, தன்னை உலகுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வறிவித்தல் நில்ைத்து நிற்றல் வேண்டும். அதற்குத்தான் புகழ் என்று பெயர். புகழை ஒளி என்றும் கூறுவர்.

ஒளிதொழுது ஏத்தும் உலகு.(970)

இப்புகழே கூட ஒருவர்க்கு உள்ள உறுதியால்தான் ஏற்படும் என்பார் திருவள்ளுவர். உள்ளத்தில் உறுதி இருந்தால்தான், அறிவு செயலாக மலர்வதற்கு ஊக்கம் தோன்றும் அறிவு செயலாக மலர்ந்தால்தான். அது பலராலுல் போற்றப்பெறும். அதுதான் புகழாகும். எனவே உள்ளத்தில் உறுதி இல்லையானால் புகழ் ஏற்பட வழியில்லை, உள்ள உறுதியற்றவன் எந்தச் செயலையும் செய்ய இயலாது. புகழும் பெறமுடியாது. எனவே,

ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை(971)

.