பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

செயலும் செயல் திறனும்



உடல் இயங்குவது ஒருவகைப் புறச் செயலானால், உணவு செரிக்கின்ற செயலும் ஒருவகையான அகச் செயலே. புறச்செயலை இயக்குவன புறவுறுப்புகளாகிய கைகள், கால்கள், ஐம்பொறிகளாகிய கண்கள். காதுகள், முக்கு வாய், மெய் ஆகியன. அகச்செயலை இயக்குவன நெஞ்சாங்குலை, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், கல்லீரல், நரம்புகள், நாடிகள் போலும் பல்வேறு நுண்ணிய உறுப்புகள்.

அதேபோல் அகவுறுப்புகள், அகச் செயல்களால் களைப்படைகின்றன. புறவுறுப்புகள் புறச்செயல்களால் களைப்படைகின்றன. ஆற்றல் இழப்பு என்பது வேறு; களிைப்பு என்பது வேறு. ஆற்றல் இழப்பு என்பது, உணவு வழியாகக் கிடைக்கப்பெறும் உயிர்ப்பாற்றல், உணவு முழுவதும் தீர்ந்து போனபின், இல்லாமற் போவது களைப்பு என்பது உடலும், உறுப்புகளும் உழைத்தலால் சோர்வு அடைவது.

சோர்வு அடைந்த உடலும், உடலின் அகவுறுப்புகளும், புறவுறுப்புகளும், உழைத்த சோர்வு, அயர்வு, அல்லது தளர்வு நீங்கவும் மீண்டும் தங்களை உழைப்புக்குத் தகுதிப் படுத்திக் கொள்ள, கட்டாயம் தாங்கள் உழைத்த அளவு நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை ஓய்வில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அந்த நேரத்தில், அவை அசைவற்று அமைந்து இருத்தல் தேவையாகிறது. எனவே உழைப்புக்குப் பின் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒய்வெடுத்துக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாதது.

சிலர் இளமைக் காலங்களில், முரட்டுத்தனமாக, ஓர் உந்துணர்வின் அடிப்படையில், ஓய்வின்றி உழைப்பதையே ஒரு பெருமையாகக் கருதிக்கொண்டு தொடர்ந்து உழைப்பதைப் பார்க்கிறோம். இதுபோல் உழைப்பவர்கள் விரைவில் உணர்வுகுன்றி, உடல்நலம் குன்றிக் கிழப்பருவம் எய்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, அத்தகையவர்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் என்பதற்காகவே இந்நிலைகளையெல்லாம் இங்கு விரிவாகச் சொல்லியாக வேண்டியுள்ளது.

இதில் இன்னும் நாம் விழிப்பாக இருக்க வேண்டியது. நாம் எடுத்துக்கொள்ளும் ஓய்வு போதுமானதாக இருக்க வேண்டும் என்பதே. எனவே, ஒவ்வொருவரும், தம் உழைப்பின் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை அவ்வாறு இயலாதவிடத்துக் கட்டாயம் நான்கில் ஒரு பகுதி நேரத்தையேனும் ஓய்வில் கழிக்க வேண்டும். அமைதியான ஓய்வு என்பது அமைதியான உறக்கமே. உறக்கத்தில்தான் அகவுறுப்புகளும், புறவுறுப்புகளும் நன்கு ஓய்வு கொள்ளுதல் முடியும். எனவே, செயலில் ஈடுபடுகிறவர்கள் போதுமான அளவு உறக்கம்