பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21. துன்பம் வரும்பொழுது தவறான வழிகளைக் கடைப்பிடியாமை

1. நேர்மை நெகிழ்ச்சியே குற்றம்

மாந்தன் எப்பொழுதுமே நேர்மையாளனாக இருப்பதில்லை. குற்றமற்றவனாகவும் விளங்குவதில்லை. எனவே, தவறு செய்பவனாகவே இருக்கிறான். இன்னும் சிலர் சில நேரங்களில் பிறர்க்குக் கொடுமை செய்யவும் துணிந்து விடுகின்றனர்.

மாந்த மனவியல்படி நேர்மையின்றி இருக்கத் தேவையில்லை. நேர்மையுணர்வும், குற்றமற்ற உணர்வும், உயர்ந்த மன உணர்வுகள். மாந்தன் விலங்குணர்வினின்று படிப்படியாக விலகித்தான் மாந்தவுணர்வு பெறுகிறான். இனி, மாந்தவுணர்வினின்று உயர்ந்து மீமிசை மாந்த உணர்வும் பெற்று உயர்தல் வேண்டும். இல்லெனில் மாந்த நிலைக்கே பொருளில்லாமற் போய்விடும். விலங்குக்கும் மாந்தனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

ஒரு மாடு தன் உடைமையாளர்க்கு உரிமையில்லாததும், வேறொருவர்க்கு உரிமையுடையதுமான ஒர் அயலார் நிலத்தில், தான் புல்மேயக் கூடாது என்று எண்ணுவதில்லை. அதேபோல், வேறொரு மாட்டுக்குரிய உணவைத் தான் உண்ணக்கூடாது என்று கருதுவதில்லை. தனக்கு உரிமையான உணவைத்தான் தான் உண்ண வேண்டும் என்னும் நேர்மை உணர்வு பறவைகளிடமும் இல்லை; விலங்குகளிடமும் இல்லை. ஆனால், அவற்றினும் உயிர்வளர்ச்சி நிலையிலும், உள வளர்ச்சி நிலையிலும் மிக முன்னேற்றம் அடைந்த மாந்தனிடம் அவ்வுணர்வுகள் இருக்கக் கூடாது அன்றோ?

ஒரு செயலில் வினையில் ஈடுபட்ட ஒருவர் அதனைச் செய்து முடிக்கும் வரையில், தனக்குள்ள உரிமைகளையும் உயர்வுத் தன்மைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டுவது மிகவும் இன்றிமையாதது.

2. பிறரை வஞ்சியாமையே நேர்மை

பெரும்பாலும், செயலில் நேர்மையாக நடக்க விரும்பும், அல்லது நடக்கும் ஒருவர், அச்செயலில் துன்பங்கள் எதிர்ப்படும்பொழுதுதான்,