பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

199



அறிவு உள்ளத்தோடு (ஆற்றலொடு Energy) இணைந்து வலுப்பெறும் பொழுது அறிவின் அழுத்தத்தால் உள்ளம் அமைவுறுகிறது; செயல் நிலை பெறுகிறது; உலகம் ஒடுங்குகிறது.

3. செயல் செய்யச் செய்ய ஆசை தோன்றும்

எனவே, செயல் செய்யச் செய்ய ஆசை பற்று தோன்றிக் கொண்டே இருக்கும். ஆசை (பற்று) தோன்றத் தோன்றச் செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வுண்மைகளைக் கீழ்வரும் ஒண்தீங் குறள்களால் நன்கு புலப்படுத்துவர் மெய்ப்பொருளாசிரியராகிய திருவள்ளுவர்,

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞசான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து. (361)

சென்றவிடத்தான் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. (422)

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். (367)

அவாஇல்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். (368)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (005)

இவ்வுண்மைகளை ஒரு தேவையளவில் மட்டும் இங்குக் கூறவேண்டியுள்ளதால் இம்மட்டோடு நிறுத்திக் கொள்ளுவோம்.

இவற்றின் கொள்பொருளாக நாம் அறிய வேண்டுவது என்னவெனில், செயல் செய்யச் செய்ய ஆசை அடங்காமல் மேலும் அதன் பயனாகிய விளைவு நலன்களிலேயே மனம் ஈடுபட்டு நிற்கும் என்பதுதான்.

4. பல்வகைத் திறன்கள்

எனவே, ஒரு வினையில் ஈடுபட்டார், அதிலுள்ள வருவாயையும் பிறநலன்களையும் பெறப்பெற, இன்னும் ஆசையாலும் திறமையாலும் உந்தப்பெற்று, மேலும் மேலும் தாம் மேற்கொண்ட வினையிலேயே ஆழமாகவும் அகலமாகவும் ஈடுபட விரும்புவதுடன், தமக்கு அக்கம் பக்கத்திலுள்ளாரைக் கண்டு, அவர்கள் ஈடுபடும் நல்ல வருவாயும் நலன்களும் உள்ள பிற வினைகளிலும் கால் வைக்க விரும்புவது பெரிதும்