பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

செயலும் செயல் திறனும்



இவற்றுள் அறிவுணர்வை மூன்றாகப் பகிர்ந்ததாலும் செயலறிவை உலகியலறிவுக்குள் அடக்கியதாலும் உணர்வு எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்க.

இவற்றுள் சில நுட்ப உணர்வுகளுக்கான விளக்கங்கள் வருமாறு (அகவுணர்வுக் கூறுகளில்)

2. ஊக்கமுடைமை : செயலுக்கு இதுவே அடிப்படையான முதலீடு போன்றது. பொருள் முதலைவிட இதனை முகாமைப்படுத்துவர் பெரும்பேராசான். உள்ளம் (ஊக்கம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் , 592)

3. உடனுக்குடன் முடிவெடுக்கும் நுட்பவுணர்வு : இவ்வுணர்வு எச்செயலுக்கும் மிகு தேவையானது. கால நீட்டிப்பையும் வீண் இழப்பையும் இவ்வறிவுணர்வு தடுக்கிறது. செயல் திறத்துக்கு மிக அடிப்படையான உணர்வு இது.

4. தற்சார்புடைமை : என்பது எப்பொழுதும் பிறரையே சார்ந்திராமல், அஃதாவது பிறரையே நம்பியிராமல், தன்னையே சார்ந்து, அஃதாவது தன்னையே நம்பியிருக்கும் தன்மை. இது செயல்திறனுக்கு மிகத் தேவையானது. இவ்வுணர்வு இயற்கையாக அமைவது. உலகின் பெரும்பாலான மக்கள் பிறரையே சார்ந்து இயங்கும் தன்மையுடையவர்களாய் இருத்தலை எண்ணிப் பார்க்கவும்.

5. பேராசையின்மை : ஆசை இருக்கலாம். மேன்மேலும் பொருளிட்டும் ஆசை செயல்திறனைக் குறைத்துப் போலிச் செயல்களுக்கு வழிவகுக்கும்.

6. மானவுணர்வு : மானம் . தன்மானம் . இவ்வுணர்வு செயலாட்சிக்கு மிக இன்றியமையாதது. மாந்தனைத் தன் கொள்கை நோக்கிலிருந்து நெகிழ விடாமல் கட்டிக் காப்பது இவ்வுணர்வுதான்.

7. பெருமித உணர்வு : தந்நலத்தின் அடிப்படையில் கொள்ளும் செருக்குணர்வு இன்றிப் பொதுநல உணர்வின் அடிப்படையில் செய்யப்பெறும் செயலினால் தோன்றும் பெருமை, உண்ர்வு இது. செயல்களுக்கிடையில் எதிர்ப்படும் மனச்சோர்வைப் பேர்க்கும் ஒருவகைத் தென்பைத் தரும் மனவுணர்வு இது.

8. குடும்ப உணர்வு : ஒருவரை நன்னெறிக்கண், மரத்திற்கு வேர்போல் நின்று நிலை நிறுத்தும் உணர்வு இது செயலாக்கத்தால்