218
செயலும் செயல் திறனும்
கற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும் (397) என்றாலும், இந்தக் காலத்திற்குள் இதைக் கற்க வேண்டும் என்பது ஒர் அளவறிவாகும். அதே போல் இதற்காக இதை இந்தக் காலத்திற்குள், இந்த அளவு, இந்த வகையில் கற்க வேண்டும் என்பதும் ஒரு கணக்கறிவாகும். இதைத்தான் திருவள்ளுவப் பெருமான்,
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.
(725)
என்பார், 'அவையஞ்சாமை' அதிகாரத்துள் இக்கருத்துக் கூறப்பெறினும், வாழ்க்கை அளவில் அதன் முழுமைக்கும் பயன்படக்கூடிய கல்விக் கூறுகள் பல. செயலும் அதைத் திறமையாகச் செய்ய வேண்டிய திறனும் அக் கூறுகளில் அடங்குவதாகும். கணக்கறிவே ஒரு கல்விக் கூறாயினும், பிறவற்றைக் கற்பதற்கும் அந்தக் கணக்கறிவு, அளவை அறிவு இன்றியமையாததாகும் என்று கூறுகிறார், பேராசிரியர்.
- ஈகை அளவு
கல்விக்கு அளவறிதல் தேவை போலவே, நம்மிடம் உள்ள ஒரு பொருளை ஒருவர்க்கு ஈயும் போதும் அவ்வளவை யறிவு தேவை என்பது திருக்குறள்.
சாவை விடக் கொடியது இல்லை; அதுவும் பிறர்க்கு ஈகின்ற செயல் இயலாத பொழுது இனியதாகப் போய் விடுகின்றது; அஃதாவது பிறர்க்கு ஈயாத விடத்து, இறந்து போவதே நல்லது, இனியது, என்னும் பொருள் பட,
சாதலின் இன்னாத தில்லை; இனிததுரஉம்
ஈதல் இயையாக் கடை
(230)
என்றும்;
என்றும்;
இல்லை யென்று ஒருவர் தம்மிடம் சொல்லிக் கேட்பதற்கு முன்னர், நாம் அவர் குறிப்பையறிந்து கொடுப்பது சிறந்தது, அதுவே நல்ல குடியிற் பிறந்தாரது நாகரிகச் செயல்.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள
(223)
என்றும்,