பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

221



உடலுக்குத் தேவையான சாரப் பொருள்களே அவனுக்கு நல்ல சுவையான மனவுணர்வைத் துரண்டி, உணவை விருப்பமாகவும் தேவையான அளவினதாகவும் ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. உடலுக்குக் கேடு தரும் கண்ட பொருள்களையெல்லாம் ஏற்றுக் கொள்வதைத் தடுத்து நிறுத்துகிறது. எனவே, நல்ல செயலாளன் ஒருவன், நல்ல சுவையுணர்வு கொண்டவனாகவும் இருக்கிறான் என்பதை உலகியலால் தெரிந்து கொள்க.

17. நினைவாற்றல்:

செயலுணர்வுக்கு நினைவாற்றல் மிக இன்றியமையாதது. நினைவாற்றலின்றிச் செயல் தொடர்ச்சி இருப்பதில்லை. செயல் தொடர்ச்சி இல்லையானால், செயல் நிறைவுறுவதில்லை. பொதுவாக உள்ள நினைவுத்திறன், செயல் திறன் உடையவர்களுக்கு நல்ல ஆற்றலுடன் இயங்குதல் வேண்டும்.

இங்கு இதுவரை ஒருவர்க்கு இயற்கையாக அமைகின்ற அகவுணர்வுக்கூறுகளின் விளக்கங்களைக் கண்டோம் இனி, செயற்கைக் கூறுகளாக உள்ள புறவுணர்வுக்கூறுகளின் விளக்கங்களைக் காண்போம்.

1.1. கல்வியறிவு:' ஆசிரியர் வழிப் பள்ளிகளில் கற்பிக்கப் பெறும் அறிவு.

1-2. கற்றறிவு: நூல்கள்வழித் தன் முயற்சியால் தானே படித்து அறிந்து கொள்ளும் அறிவு.

13. கேள்வியறிவு : உலகியல் வழிப் பிறர் வாயிலாகவும், உசாவியும், தானே பட்டும் (அனுபவித்தும் அறிந்து கொள்ளும் அறிவுத்திறன்.

1-4.சொல்லறிவு: உணர்ந்ததைத் தகுந்த சொற்றொடர்களால் வெளிப்படுத்தும் திறன். இஃது ஒரு செயலைப் பற்றித் தான் தெரிந்ததைப் பிறர்க்குத் தெளிவாக உணர்த்தவும் உணரவும் பயன் தரும்.

2. சுறுசுறுப்புணர்வு: பொறிகளும், புலன்களும் எப்பொழுதும் எதனையும் ஏற்றுச் செய்யும் இயங்குதிறன்

3. செயல்திறம்: எதையும் நிறைவுறச் செய்யும் செயலாற்றல்.

4. கடமை உணர்வு: கொடுக்கப்பட்ட செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வமும் அக்கறையும் கலந்த செயலுணர்வு.

5. பொறுப்புணர்வு: ஒரு செயலைக் குறிப்பிட்ட திட்டப் படியும்,