பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

செயலும் செயல் திறனும்



குறித்த காலத்திற்குள்ளும் செப்பமாகவும் நிறைவாகவும் செய்ய வேண்டும் என்னும் செயலறுதி.

6. கண்காணிப்புணர்வு: செயல் சிதைவுறாமல் செப்பமாகச் செய்யப் பெறுகிறதா என்று அடிக்கடி மேற்பார்வையிடுகின்ற காப்புணர்வு.

7. சிக்கன உணர்வு: முதலீடு சிதைந்து போகாமல் செயலுக்கே பயன்படும்படி, பிறதுறைச் செலவுகளைக் கட்டுப்படுத்திக் காக்கின்ற கட்டுப்பாட்டுணர்வு.

8. பேச்சுத் திறன் செயலைப்பற்றிப் பிறர்க்கு நன்கு விளக்கவும், விளங்காத நிலைகளைத் தெளிவாக எடுத்துக் கேட்கவுமான சொல் ஆற்றல்.

9. தருக்கத் திறன் சரியெது சரியல்லாததெது என்று கருத்து வழி ஆய்கின்ற கருத்துத்திறன்.

10.துய்மையுணர்வு: பணியைத் துய்மையாகச் செய்யவும், பணிக் கருவிகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவுமான உணர்வு.

11-12. பசி பொறுத்தல், தூக்கம் பொறுத்தல்: பணி நிலையை முகாமையாகக் கருதி, பசி, கண்விழிப்பு, சோர்வு முதலிய உடல் நலிவுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ஊக்கவுணர்வு செயல் திறனுடையவர்கள் இவற்றைப் பெரிதாகக் கருத மாட்டார்கள்.


மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
கருமமே கண்ணாயி னார்.

என்னும் குமரகுருபரரின் நீதிநெறி விளக்கச் செய்யுளை ஒர்க.

13. உழைப்புத்திறம்: உள்ளத்தாலும், உடலாலும் உழைக்கின்ற உணர்வும் வலிமையும் உடைய வன்திறம்.

14. பிறர் கையை எதிர்பாராமை: பொருளுக்கோ, செயலறிவுக்கோ, வேறு வகை உதவிகளுக்கோ பிறருடைய கைகளை எதிர்ப்பார்த்துக் காத்திராத தன்மை.

15. பரபரப்பில்லாத அமைவான நடைமுறை சுறுசுறுப்பு வேறு; பரபரப்பு வேறு. எதிலும் பரபரப்பான நடைமுறை செயல்