பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

227



இருப்பவர்கள் அல்லது கிடைப்பவர்களைக் கொண்டு செயல்படுவதென்பது வேறு. செயலுக்கு வேண்டியவர்கள் அல்லது பொருந்தக் கூடியவர்களைத் தேடிப்பிடித்து அமர்த்திச் செயலைச் செய்தல் அல்லது செய்வித்தல் என்பது வேறு. முன்னது பொது பின்னது சிறப்பு. ஒரு செயலை முன்னவர் போலவே செய்வது என்பது பொது. அவரை விட இன்னும் சிறப்பாகச் செய்வது என்பது சிறப்பு அதுவே வாழ்வில் பெருமை சேர்ப்பதும் ஆகும்.

பெருமை உடையவர் ஆற்றுவார், ஆற்றின்

அருமை உடைய செயல்

(975)



பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்

கருமமே கட்டளைக் கல்.

(550)

என்னும் பொய்யா மொழிகளை ஒர்க, இவற்றுள்உள்ள 'அருமை', 'பெருமை' இரு சொற்களும் சிறப்புறச் செய்வதையும் குறிப்பனவாகும்.

நாம் செய்யும் அனைத்துச் செயல்களும், பொதுவாக நான்கு வகைப்பட்டன. உலகின் அனைத்துச் செயல்களையுமே இந்நான்கு கூறுகளுக்குள் அடக்கிவிடலாம்.

1. வாழ்வியல் நிறைவுச் செயல்கள் - அடிட்பபடைச் செயல்கள்:

இவை வாழ்வியலுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் இவற்றை மட்டுமே நோக்கி அவற்றை நிறைவுறுத்துவதற்காகச் செய்யப்பெறும் செயல்களாகும். இவற்றை மட்டுமே செய்வதால் ஒருவர் எவ்வகைச் சிறப்பும் பெறுவதில்லை. இவை மாந்தராகப் பிறந்த அனைவரும் செய்யக் கூடிய செயல்களே ஆகும்.

2. வாழ்வியலுடன் கூடியஆளுமை செயல்கள் சிறப்புச் செயல்கள்:

முன்னர் கூறிய வாழ்வியல் நிறைவுச் செயல்களுடன் கலை, கல்வி, வாணிகம், வீரம், ஆட்சி முதலி ஒன்றனுள்ளோ, ஒன்றுக்கு மேற்பட்டனவற்றுள்ளோ ஈடுபட்டுச் சிறப்புறச் செய்யும் செயல்கள்.

3. வாழ்வியலுடன் ஒரு கொள்கை நோக்கிய செயல்கள் செயற்கரிய செயல்கள் :

இவை வாழ்வியல் நிறைவுச் செயல்களுடன், தம் அறிவுக்கும், உணர்வுக்கும் உகந்ததும், தமக்கன்றிப் பிறருக்கும் பயன்படுவதும் ஆன ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டு, செய்யும் அரிய செயல்களாகும். இவற்றுள் சமயம், மாந்த உரிமை, பொதுநலம், மாந்த மேம்பாடு