பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

செயலும் செயல் திறனும்



கூடாநட்பு என்னும் ஐந்து சிறப்பதிகாரங்களையும் இகல், பகை மாட்சி, பகைத்திறந் தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை ஆகிய ஐந்து பொதுவதிகாரங்களையும் பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் ஆகிய இரண்டு பெண் வழி நட்பதிகாரங்களையும் ஆகமொத்தம், பன்னிரண்டு அதிகாரங்களில் நூற்று இருபது குறட்பாக்களை எடுத்துக் கூறுவது பெரிதும் கவனிக்கத் தக்கது. நட்புக்குத் திருவள்ளுவப் பெருமான் ஒரு சிறப்பிலக்கணம் கூறுவார்.அதை அனைவருமே மனத்தில் இருத்திக் கொள்வது நல்லது.

நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

(797)

என்பது அது. அஃதாவது நட்பு என்பது பிரிவு இல்லாதது. பிரிவு இருந்தால் முன்னர் கொண்ட தொடர்பு, நட்பு என்று பெயர்பெறாது. ஏதோ ஒன்றுக்காக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகியிருக்கிறார் என்பதே பொருள். இணைந்தவுடன் எவரிடத்துப் பிரிவு என்பது (அஃதாவது தொடர்பு அறுவது இல்லையோ, அதுவே நட்பாகும். எனவேதான் ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார் அவர்.

எனவே, ஏதோ ஒரு செயலின் பொருட்டாக ஒன்று சேர்பவர் நண்பர் என்று கொள்ளப் பெறார். நண்பராக இருந்துதான் அவரை ஒரு செயலின் பொருட்டாக இணைக்கவோ துணையாகக் கொள்ளவோ வேண்டும். பழகுகின்ற எல்லாரையுமே நண்பராகக் கருதிச் செயலுக்குத் துணையாகக் கொண்டுவிடக் கூடாது. இதில் செயலுக்கு முனைந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் செயல் தொடங்குகின்ற வரையில் ஒன்றாக இணைந்து நின்றவர்கள் அது தொடங்கி நடைபெறுகையில் வேறாகப் பிரிந்து விடுவதுதான் உலகில் பேரளவில் நண்டபெறுகிறது என்பது திருவள்ளுவர் கருத்து.

எனைவகையான் தேறிய கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்,

(541)

என்னும் குறளை முன்னரே உணர்ந்திருக்கின்றோம் அன்றோ?

8. துணையாளர்க்கும் பணியாளர்க்கும் உள்ள வேறுபாடுகள்

நல்ல துணையைளர்களை அமர்த்துதல் தொடர்பாக இதுவரை சில விளக்கங்களைப் பார்த்தோம். இனி, நம் செயலுக்குத் தக்கப் பணியாளர்களை அமர்த்துதல் தொடர்பாக மேலும் சில கருத்துகளைப் பார்ப்போம். அதற்கு முன்துணையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும்