பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

செயலும் செயல் திறனும்



ஒவ்வொன்றில், ஒரு சிலர் சிலவற்றில் திறமையும் ஆர்வமும் உடையவராகவே இருப்போம். அந்த நிலையை முதலில் நாம் தெரிந்து கொண்டே பிறகு அனைத்து நிலைகளிலும் முனைந்து போக வேண்டும்.

அடுத்து, இன்னொன்று. நாம் எப்படி தேவையானதைப் பயனுடையதைக் கற்க வேண்டுமோ, அவ்வாறே நமக்கும் பிறர்க்கும் தேவையான பயனுடைய செயல்களையே செய்ய முனைதல் வேண்டும்.

"செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

(486)

வெறும் பணநோக்கம் கொண்டுமட்டும் செயல்களைச் செய்ய எண்ணிவிடக் கூடாது. மாந்தன் தன் அரிய பிறப்பைப் பணத்தைத் தேடுவதிலேயே அழித்துக் கொள்ளக் கூடாது. மாந்தன் உயர்ந்த பிறப்புடையவன். அவன் வாழ்க்கையும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும். பணத்தை ஈட்டுவதும் அதைச் செலவழிப்பதுமே வாழ்க்கை ஆகாது.

பொருட் செல்வம் யூரியார் கண்ணும் உள

(412)

என்பர் குறளாசான்,

இதைவிட உயர்ந்த குறிக்கோளுக்காகவே ஒவ்வொருவரும் உளர்.

3. பிறவிப் பயன்

நம் அனைவர்க்கும் வாழ்க்கையின் பொதுவான குறிக்கோள் உயிர்மலர்ச்சியே. இவ்வுலகில் தோன்றிய அனைத்து உயிர்களையும் பார்க்கின்ற பொழுது, அவை எல்லாவற்றுள்ளும் மாந்த உயிரே சிறந்து விளங்குவதை நாம் காண்பதிலிருந்து, மலர்ச்சியுற்ற உயிர்க்கும் மலர்ச்சியற்ற உயிர்க்கும் உள்ள வேறுபாடுகளையும் சிறப்புகளையும் நாம் அறிய முடிகிறது. ஆனால் அவற்றை அறிந்த பின்னரும் நாம் வெறும் உணவுக்காகவும், இன்பத்திற்காகவும் அவற்றை உண்டாக்கிக் கொள்ளும் பொருட்டுப் பணத்திற்காகவுமே நாம் வாழ்கிறதாக இருத்தல் கூடாது. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத உயிர் மலர்ச்சி நமக்கு இருப்பது, அவற்றைப் போலவே வாழ வேண்டும் என்பதற்காக அன்று. அவற்றினும் உயர்ந்த குறிக்கோளுடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும். இல்லெனில் நம் பிறவி பயனற்றதாகவே கருதப் பெறும்.

எனவே, உயர்ந்த உயிர் இயக்ககத்திற்கு நிலைக்களன்களாக அமைந்த நம் உணர்வு. அறிவு, குறிக்கோள் ஆகியவை, நம் வாழ்வைப்