பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

73



படாமல் அஃதாவது நாமே ஈடுபடாமல், அல்லது துன்பப்படாமல் வரும் என்பது அறியாமை அல்லது செருக்கு செருக்கு என்பது நமக்குத் தெரிந்த சிறிய அறிவை மிகுதியாகக் கருதிக் கொள்வது. செருக்கு மிகுதி. செருக்காகக் கருதிக் கொள்ளுதல்.

4. கற்றலின் கேட்டலே நன்று

ஆகவே, இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் ஒன்றை நாமே அறிந்து கொள்வதைவிடக் கேட்டறிந்து கொள்வது எளிது; நல்லது என்பது தெரிகிறது. “கற்றலின் கேட்டலே நன்று” என்பது அறிந்தார் வாய்ச்சொல் திருவள்ளுவப் பெருந்தகையும் கற்றிலனாயினும் கேட்க (414) என்பார் தெரியாதார் தெரிந்தாரைக் கேட்டது இழிவாகாது. மானக்கேடும் ஆகிவிடாது. கேட்டுச் செய்வது இழிவென்று கருதி, சிலர் கேட்காமலே செய்து, பிறகு துன்புறுவர். ஒருவர் கேட்பதால், சொல்லுபவர்க்குக் கிளர்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படும். தமக்குத் தெரிந்ததைப் பிறர்க்குச் சொல்லவேண்டும் என்பது ஓர் இயற்கை உணர்வு. அவ்வுணர்வுதான் அறிவு பரவ வழியாக அமைகிறது. தன் பிள்ளைக்குப் பாலூட்டுவதை எப்படி தாய் இன்ப உணர்வாகக் கருதுகிறாளோ, அப்படி ஒருவர் தமக்குத் தெரிந்ததை மற்றவர்க்குச் சொல்வதை இன்பமாகக் கருதுகிறார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நல்லவர் எல்லாரும் எண்ணுகின்றனர். தன்னிடம் இருப்பதை மற்றவர்க்குக் கொடுப்பதை ஈத்துவக்கும் இன்பம் (228) என்பார் திருவள்ளுவர். ஈவது பொருளை மட்டுமன்றி அறிவையுந்தான்! தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுப்பதைப் போன்றது, ஒர் ஆசிரியர் மாணவனுக்கு அறிவூட்டுவது, அறியாதவனுக்கு அறிந்தவன் ஒருவன் சொல்லித் தருவது தெரிந்தவன் தனக்குத் தெரிந்ததைப் பிறர் எப்பொழுது வந்து கேட்பார்களோ என்று இருப்பான். தீய எண்ணம் அல்லது தன்னலம் உடைய சிலர்தாம் தமக்குத் தெரிந்ததைப் பிறர் கேட்டாலும், சொல்லுவதற்கு விரும்பமாட்டார்கள். அத்தகைவில்லாதவர்கள், பிள்ளைக்குப் பால் கொடுக்காத கொடிய தாய்மார்களைப் போன்றவர்கள். தன் அழகு கெடுமென்று பிள்ளைக்குப் பால்கொடாமல் இருப்பது தன்னலம். அவர்களுக்குத் தாய்மை உணர்வும் குறைவாகவே இருக்கும்! அவர்களைத் தாய்கள் என்று சொல்வதைவிடப் பேய்கள் என்று சொல்லலாம். மற்றபடி நாய்கள் என்று கூடச் சொல்லக் கூடாது. ஏனெனில் நாய்கள் தாம் தம் குட்டிகளுக்கு அன்போடு பால் கொடுக்கின்றனவே? தாம் அறிந்ததைப் பிறர்க்குச் சொல்லிக் கொடுத்து மகிழாதவர்களையும் தந்நலப் பேய்கள் என்றுதான் சொல்லல் வேண்டும். இத்தகைய தந்நலப் பேய்களாகச் சிலர் இருப்பர். அவர்களுக்காக நாம் கவலைப்பட வேண்டுவதில்லை. ஒருவர் சொல்லித் தராமற்போனால் இன்னொருவரிடம் போதல் வேண்டும். அவர் இல்லையானால் இன்னொருவர். எவ்வாறாயினும் தெரியாதவர் தெரிந்தவரை - அதைத்