பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

செயலும் செயல் திறனும்



'செப்பம் உடையவர்' (112), 'தக்கார்' (114), 'தெளிந்தார்' (143), 'செவ்வியார்' (169) 'ஒத்ததறிவார்' (214), 'நயனுடையார்' (216), 'பெருந்தகையார்' (217), 'குலனுடையார்' (223), அளவறிந்தார், (288), 'அறிவுடையார்' (427, 816, 430), பெரியார் (443), 'ஒள்ளியவர்' (487),'நடுக்கற்ற காட்சியவர்' (654), 'நீரவர்' (அறிவுடையர்),(782), 'பண்புடையாளர்' (783, 996), 'பழிநாணுவார்' (794), 'எல்லைக் கண் நின்றார்' (805) 'இற்பிறந்தார்' (951), 'குடிப்பிறந்தார்' (952, 954), 'குலத்தில் பிறந்தார்' (954), 'மானம் உடையார்' (970),'பெருமை உடையார்' (974), 'பாடறிவார்' (பெருமையறிவார் (955), 'நல்லவர்' (1011) என்று பலவாறாக வியந்து போற்றுவார்.

இத்தகையவர்களே உலகியல் அறிந்தவர்கள். உயிருக்குத் துணையாக நிற்பவர். அவர்களே வினைக்குத் துணையாக இருக்க இயலும் என்பது குறிப்பால் உணர்த்தப் பெற்றவராவர். அவர்களைத் தேர்ந்து தெளிவது கடினம். இருப்பினும் அவர்களையே கொடுத்தும் கொளல் வேண்டும். (867), உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் வேண்டும் (703).

இனி, வினைக்குப் பொருந்திய காலம், இடம் முதலியவற்றைத் தேர்தல் குறித்து அடுத்த பகுதியில் பேசுவோம்.