பக்கம்:செவ்வானம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 (38 செவ்வானம் பட்டம் சூட்டிவிடுகிறார்கள் என்பதை உணர அவனுக்கு அதிககாலம் பிடிக்கவில்லை பணமும் புகழும்பெருத்துவிட்டால் மடையர்கள்கூட மக்களின் ஆதரவை அதிகம் பெற்றுவிட முடிகிறது மனித சமுதாயத்திலே! உண்மையில் அவர்கள்தான் மதிப்புப்பெற முடிகிறது. அவர்கள்தாம் வாழ வகைசெய்து மனித குலத்தை வீழ்ச்சிப் பாதையிலேயே இழுத்துச் செல்கிறார்கள் இவற்றை உணர உணர அவன் உள்ளக் கொதிப்பு அதிகரித்தது. தனது குமுறல்களையெல்லாம் காரசாரமாக எழுதி வைத்தான் தனது குறிப்புப் புத்தகத்திலே. அதைத்தவிர அவன் வேறு என்ன செய்துவிடமுடியும்? கொதிநிலை மீறிவிடும்போதுதான் இடம் காலம் முதலியவைகளைக் கவனிக்காமல் சுடுசொற்கள் சிதறிவிடுவது வழக்கம். மற்ற வேளைகளில் துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகைக் கட்டுரைகள்மூலம் தனது எண்ணங்களை வெளியிட முயன்றான். அவனது செயல்கள் பாராட்டுதல்களைப் பெறுவதும் உண்டு. போற்றுதல்களை விட அதிகமான எதிர்ப்புகளை தாக்குதல்களை, பயமுறுத்தல் கடிதங்களைப் பெற்றுத் தருவதும் வழக்கமே. அநேகமாக எச்சரிக்கைகள் எல்லாம் வெறும் மிரட்டல்களாகத்தான் முடியும் புன்னைவனத்தின் புகழ் முயற்சிக்குப் பாதகமாக அவன் பேசிய தினத்தன்று இரவிலே நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் எதிரொலியாக ஆபத்து விளையலாம் என எதிர்பார்த்தான் தாமோதரன். ஆனால் விபத்துக்கள் எதுவும் வந்து சேரவில்லை. சிவசைலம் இன்பப்பொழுதுபோக்குகளில் தீவிரமாக ஈடுபட்டு விட்டதனால் அவர் எச்சரிக்கைக் கடிதத்தை வெத்து வேட்டு அந்தஸ்திலேயே விட்டுவிட்டார். அவரது திருவிளையாடல்களும், புன்னைவனத்தின் முயற்சிகளும் தாமோதரனின் கவனத்தைக் கவராமலிருக்க முடியுமா? 'பணபலம் இருப்பதனால் அவர்கள் நினைத்ததைச் சாதிக்க முடிகிறது. கழகம் தொடங்கவும், கட்சியின் ஆதரவைப் பெறவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/108&oldid=841311" இலிருந்து மீள்விக்கப்பட்டது