பக்கம்:செவ்வானம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 செவ்வானம் அதை எப்படி நிறைவேற்றலாம்? என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? விளக்குச் சிம்னிக்குள் அகப்பட்டு, வெளியேற வழி தெரியாமல் உள்ளேயே குமைந்து குடைந்து கிருகிருத்துக் கொண்டு மோதிமோதித்திணறும் ஈமாதிரி, அதே நினைவு வட்டத்தில் சிந்தைத் தெளிவு அற்றவராய், வழி புலனாகாதவராய்த் திண்டாடிக் கிடந்தார் புன்னைவனம் நேரம்தான் ஒடிக்கொண்டிருந்தது. சுழலும் மின்சார விசிறி பொம்மென ஒரு ரக ஒலி எழுப்பிச் சுற்றியது. பக்கத்து அறை ஒன்றிலே கடமைச்சுமை காரணமாகத் துக்கம் இழந்து துடிக்கும் கடியாரம் காலத்தை அளக்கும் அர்த்தமற்ற பணியிலே விடாது ஈடுபட்டு ஏதோ அற்புத வெற்றி கண்டுவிட்டதுபோல் அடிக்கடி மணியடித்து மணியடித்து தன் பெருமையை ஒலி பரப்பிக் கொண்டிருந்தது பன்னிரண்டு - அரை - ஒன்று - அரை - இரண்டு - அரை இரவின் அமைதியிலே கனமாக ஒலிக்கும் மணி ஓசை. கால தேவனின் அடியோசை போன்ற கடியாரத்தின் 'டிக் - டக் ஓசை, ஒடுங்காத மின் விசிறியின் ஓயாத 'ங்ங்ொய் சப்தம். அமைதியில்லை. செல்வர் புன்னைவனநாதர் அமைதி பெற வழியில்லை. அவமானம் விளைவித்துவிட்ட விழாவின் சிறப்பைக் கெடுத்துவிட்ட குழப்பத்திற்கு வகைசெய்த வீணனை ஒடுக்க வேண்டும். ஒடுக்கியாக வேண்டும். அவர் பெருமூச்செறிந்தார். திடீரென வெடித்தது ஒர் எண்ணப்பொறி. ஆகா. இதுதான் சரி. இதுதான் வழி என்று கெக்கலிகொட்டியது மனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/22&oldid=841382" இலிருந்து மீள்விக்கப்பட்டது