பக்கம்:செவ்வானம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 செவ்வானம் போலிருக்கு தமது சாதனை பற்றிய எண்ணத்தின் மகிழ்விலேயே சொக்கிக் கிடந்தார் அவர் - ஆனால் விஷயம் அறியாத புன்னைவனம் ஆத்திரப்பட்டார். என்ன? என்ன? என்று. நீங்கள் மனோகரன் டிராமா பார்த்திருக்கிறீர்களா? நம்ம அமைச்சூர் குருப்பிலே அந்த டிராமா பிரமாதமாகயிருக்கும்! 'விஷயத்தைச் சொல்லாமல் நீங்க என்று இழுத்தார் முதலாளி. அதுக்கு வராமல் போவேனா இது முன்னுரை. அதிலே மனோகரன் வாளை உருவும்போதெல்லாம், மனோகரா, விடுவாளை என்று ஸ்டைலாகச் சொல்லிக் கொண்டு விஜயம் செய்யும் பாத்திரத்தை நான் தான் நடிப்பேன். பிரமாதமாக இருக்கும். அப்படி, தம்பி தாமோதரன் வாலாட்டும் போதெல்லாம் - தாமோதரா, துள்ளாதே. இதோ இருக்குது கத்தி என்று எச்சரிக்கை நோட்டிஸ் அவனுக்குக்கிடைக்கும். அப்புறம் அவன் பயத்தினாலேயே செத்துப் போகமாட்டானா செத்து? தனது அபாரமான திட்டத்தை எண்ணிப் பிரமாதமாகச் சிரித்தார் அவர். ஆனால் முதலாளிக்கு அது பிரமாதமாகப் படவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. நீங்கள்சொல்லும்போது அருமையாகத் தானிக்கிறது. ஆனால் நடைமுறையில்? ஏதோ புத்தகத்திலே, கதையிலே படிக்க நன்றாயிருக்கும். இதைக் கண்டுதானா அவன் பயப்படப்போகிறான் என்று முனங்கினார் அவர் தனது எண்ணத்தை சிவசைலத்திடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயங்கினார் புன்னைவனம். போனால் போகிறது என்று பெரிய மனது பண்ணிசிவசைலம் கேட்டு வைத்தார், ஆமா நீங்க வேறெ என்ன செய்யலாமென்று நினைக்கிறீங்க?' என்று. . - ه..... ، " . புன்னைவனம் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/48&oldid=841412" இலிருந்து மீள்விக்கப்பட்டது