பக்கம்:செவ்வானம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 77 அவர் அமர்ந்திருக்கும்போது ஜம்மென்று நாற்காலி கொள்ளாமல் பிரமாதமாக இருக்கும். எழுந்து நடந்தால் தான் முன்னால் வெகுவாக வளர்ந்து விட்ட தொந்தி ஆளைக் கெடுத்து விடும். ரொம்ப காலம் வரை குடுமியில் ஆசை வைத்திருந்தவர் திடீரென்று கிராப் மீது மோகம் கொண்டு விட்டார். எனினும் நெற்றியில் சந்தனப் பொட்டு அல்லது ஜவ்வாதுப்பொட்டு சிறிதாக மிளிரும். எப்பொழுதும் சில்க் ஜிப்பா அணிந்திருப்பார். இத் திருக்கோலம் கலையாமல் அமர்ந்திருந்த புன்னை வனத்தின் சந்நிதியில் இரண்டு வரிசைகளாகக் கிடந்த நாற்காலிகளில் தான் தனது ரசனைக்குரிய அழகின்துகள்களைக்கண்டார் சிவசைலம். உயர்ந்த கைப்பிடிகளுடன், உள்குழிந்த தொட்டில் போன்ற நாற்காலிகளில் சொகுசாகச் சாய்ந்திருந்தார்கள் சிங்காரிகள் நால்வர். எதிர் வரிசையில் ஆண்கள் இருந்தனர். நங்கையர் நால்வரில் இரண்டு பேர் அழகிகள் யுவதியர். வேறொருத்தி பாவாடையழகி. மற்றொருத்தி அவர்களைக் கண்காணிக்க வந்த அம்மையார். அவள் கூட வலை வீசும் தளுக்குக்காரி மாதிரித்தான் அலங்காரம் செய்திருந்தாள். பாவாடை யணிந்த பெண்ணுக்கு பதின்மூன்று, பதினான்கு வயது தானிருக்கும். மற்ற இருவரும் இரட்டைப் பின்னல் அழகிகள். சினிமா எக்ஸ்ட்ராக்கள் போல் காட்சியளித்தனர். ஒருத்தி ரத்தச் செந்நிற ஆடை அணிந்திருந்தாள். மற்றவள் மேனிக்கு பச்சைப்பட்டு வனப்பு கொடுத்தது. அவ்விருவரும் காமிரா முன்பு நடித்துக் கொண்டி ருப்பதாக நம்பினர்போலும் அவர்கள் பார்வையும், தலையசைப்பும், கை அசைவுகளும், கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒயிலாகச் சாய்ந்திருந்த தோரணையும் இந்த எண்ணத்தையே தந்தன. ‘ஹஹ! உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். வந்து இப்படி உட்காருங்க என்று ஆலோசனையாளரை வரவேற்றார் முதலாளி. சிவசைலம் அவர் அருகில் கிடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/79&oldid=841446" இலிருந்து மீள்விக்கப்பட்டது