பக்கம்:செவ்வானம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 97 வந்த சாவித்திரி'ஓ, நான் கவனியாமல் இருப்பேனா என்று சொல்லி, அவரிடம் அன்பாக அளித்தாள். 'நீங்க வந்து ரொம்ப நேரமாச்சோ? என்று பெரியவள் விசாரித்தாள். வந்து அஞ்சு நிமிஷம்கூட இராது. அவர் வந்ததும் - இருங்கள், எல்லோரும் இப்ப வந்து விடுவார்கள் என்று சொல்லி விட்டு நான் ஒவல் தயாரிக்கப் போனேன் என்று நல்ல பிள்ளையா நடித்தாள் சாவித்திரி. 'பரவால்லியே, இவள் பிழைத்துக் கொள்வாள். மேடையில் இவள் நடிப்பு எப்படி இருக்குமோ! வாழ்க்கையில் அற்புதமாக நடிக்கிறாள்' என்று நினைத்தார் சிவசைலம். 'இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முதலாளி கார் அனுப்பி வைப்பார் வந்து சேருங்கள். நான் சம்மா இந்தப் பக்கமாக வந்தேன். உங்க விலாசம் ஞாபகம் வந்தது. அப்படியே பார்த்துவிட்டுப் போகலாமே என்று...' அதுக்கென்ன நீங்கள் அடிக்கடி வாருங்கள் உங்க மாதிரிப் பெரிய மனிதர்கள் தயவு இருந்தால் தானே குழந்தைகள் நல்ல நிலைமைக்கு வரமுடியும் என்றாள் அம்மா. சிவசைலம் முதல் முற்றுகை அபார வெற்றியளித்துவிட்டது என்ற தன்னம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டார். குமாரிகள் கும்பிட்டு வழியனுப்பி வைத்தனர். சாவித்திரி கைகுவித்த தன்மையில் கலை நயமும் தனி எழிலும் இருப்பதாக அவர் நம்பினார். அவள் குறுகுறு விழியின் அன்புப் பார்வையிலே, இதழ்க் கடையின் சிறு சிரிப்பிலே எவ்வளவோ அழகும் அர்த்தமும் நிறைந் திருப்பதாகத் தோன்றியது அவருக்கு பதிலுக்கு புன்னகையும் கெளரவக் கையசைப்பும் அருளிவிட்டு நகர்ந்தார் அவர். 18 முதலாளி புன்னைவனம் அவர்களுக்கு ஏராளமான பணம் இருந்தது. அதனால் பணத்தோடு பணம் சேர்வதற்குப் பல வழிகளும் செ. - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/99&oldid=841468" இலிருந்து மீள்விக்கப்பட்டது