இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் மா. இராசமாணிக்கனார்◯ 67
‘உலகெலாம்’
அவ்வமயம் "உலகெலாம்" என்ற சொற்றொடர் அவர் காதிற் பட்டது. சேக்கிழார் அதனை இறைவன் தந்ததாக எண்ணி, அதனையே முதலாகக் கொண்டு, தமது நூலைப் பாடத் தொடங்கினார்.
- “உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்
- நிலவு வாவிய நீர்மலி வேணியன்
- அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
- மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்”
என்பது கடவுள் வாழ்த்து.
நூல் பாடி முடித்தது
சேக்கிழார் கடவுள் வாழ்த்தை முதலாகக் கொண்டு நூல் பாடத் தொடங்கினார். ஒரு வருட காலம் தில்லையில் தங்கி நூலைப் பாடி வந்தார். தமக்கு அவ்வப்பொழுது உண்டான சந்தேகங்களைத் தில்லை வாழ் அந்தணர் முதலிய பலவூர்ப் பெரியோர்கட்கு ஆட்களை அனுப்பித் தீர்த்துக் கொண்டார்; இராப்பகலாகப் புராணம் பாடுவதை மேற்கொண்டார்; ஓராண்டு முடிவில் திருத் தொண்டர் புராணத்தைப் பாடி முடித்தார்.
நூல் அரங்கேற்றம்
அமைச்சர் பெருமான் நூலைப் பாடி முடித்தார் என்பதை அரசர் பெருமான் கேள்விப்பட்டான், நூல் அரங்கேற்றம் செய்ய ஒரு நாளைக் குறிப்பிட்டான்.