பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாயிரம் தன்மையினர் பழமை அழ காராய்ந்து தரிப்பர் தவறுநலம் பொருளின் கண் சார்வாராய்ந் தறிதல் இன்மையினர் பலர்புகழின் ஏத்துவர்ஏ திலார் உற் நிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கென ஒன்றிலரே என்பது அப்பாடல். இன்னேரன்ன பொருட் பொலிவு செறிந்திலகலின், இதனைத் தேங்கு சிவப்பிரகாசம்' என்றனர். முதலிய வாய் மலர்ந்து' என்றது, உமாபதிசிவம் சிவப்பிரகாசமேயன்றிச் சித்தாந்த சாத்திரங்களான திருவருட் பயன், வினவெண்பா, போற்றிப் பஃருெடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதுாது, கங்கற்ப நிராகரணம் ஆகிய பிற நூல்களைச் செய்ததைக் குறிப்பிட்டே என்க. உண்மைநெறி விளக்கத்தையும் இவர் செய்தனரெனக் கூறும் மரபும் உண்டு. இவ்வெட்டு துாற் களைச் சித்தாந்த அட்டகம் என்பர். திரு பிள்ளை அவர்கள், உமாபதி சிவத்தை இங்ங்னம் பன்னிப்பன்னிக் குறிப்பிட்டதன் கருத்துச் சேக்கிழார் பெருமாளுருடைய வரலாற்றைப் புராணமாகப் பாடித் தந்த காரணத்தால் என்க. திரு பிள்ளை அவர்கள், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாடுதற்கு அது பெருந்துணையாக அமைந்தது. உமாபதி சிவாசாரியார், சிதம்பர தீட்சிதர் மரபில் தோன்றியவர். இவர் தென் மொழி, வட மொழிகளை நன்கு பயின்றவர். தில்லைக் கூத்தப் பெருமானேப் பூசனை புரிந்து வந்தவர். இவர் சித்தாந்த சாத்திர நூல்களைப் பாடிய தோடின்றிக் கோயில் புராணம், திருமுறைகண்ட புராணம், திருத்தொண்டர் புராண வரலாறு என்னும் சேக்கிழார் புரா இனம், திருத்தொண்டர் புராண சாரம், திருப்பதிகக் கோவை பெளட்கராகம வியாக்கியானம் ஆகியவற்றையும் அருளிச் செய்தவர். இவர் சோழ அரசரால் முத்துப் பல்லக்கு, மேள தாளம், தீவட்டி ஆகியவற்றை அடைந்தவர். ரீ மறை ஞானசம்பந்தரிடம் ஞான தீட்சை, உபதேசம் முதலியவற் றைப் பெற்றவர்.