பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காப்புப் பருவம் தொட்ட வழக்கு, வீற்றிருக்கும் சிறப்புடன் பொருந்தி இருக்கும், ஏர் - அழகு, வழு அரும் - குற்றம் இல்லாத, எழு வரும் - எழு அடியார்கள், தழுவ அரும் - தழுவ முடியாத, தழால் - தழுவி, உறைந்திட உள்ளத்தில் பொருந்திட ஏத்தெடுப்பாம் - போற்றுவாம். விளக்கம்: காப்பு என்பது காவல். ஈண்டுக் காப்புப் பருவமானது பாட்டுடைத் தலைவனும் குழந்தையைக் காக்கு மாறு தெய்வங்களே வேண்டும் பருவமாகும். குழந்தையின் பருவங்களைப் பகுத்துக் கூறும் புலவர், குழந்தையைக்காக்கப் படவேண்டிய தெய்வங்களைப் பற்றிப் பருவம் என ஒன்றை வகுத்துக் கொண்டு பிள்ளைத் தமிழைப் பாடுவார். பிள்ளைத் தமிழுக் குரிய பருவங்கள் இன்ன என்பதைக் கூற வந்த இலக்கண விளக்கம், கடுங்கொலே நீக்கிக் கடவுள் காப்பச் செங்கீரை தால்சப் பாணி முத்தம் வாரா னைமுதல் வகுத்திடும் அம்புலி சிறுபறை சிற்றில் சிறுதேர் என்னும் பெறுமுறை ஆண்பால் பிள்ளைப் பாட்டே என்று குறிப்பிட்டிருத்தல் காண்க. அப்பருவ அமைப்புக்கள் இந்நூலில் அமைந்திருத்தலை அறியவும். காப்பு, குழந்தை பிறந்த இரண்டாம் மாதத்தில் கூறப் படும் என்பர். பொதுவாகக் காப்புப் பருவத்தில் இறைவன் இறைவி, திருமால் முருகன், கணபதி முதலான தெய்வங்களை வேண்டிக் குழந்தையைக் காக்க என்று படுதல் மரபு. இம்முறைகளை எல்லாப் பிள்ளைத் தமிழ் நூற்களில் காண லாம். ஆனல், திரு பிள்ளை அவர்கள், சேக்கிழார் பெரு மானுக்குக் காப்புத் தெப்வமாக எல்லோரும் பாடும் பொது முறையை மேற் கொள்ளாமல், ஒரு னிச் சிறப்பு முறை யைக் கைக்கொண்டனர். திரு பிள்ளேஅவர்கள் பாடும் இப் பிள்ளைத் தமிழுக்குச் சேக்கிழார் பெருமாளுர் பாட்டுடைத்